Just In
- 2 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 3 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 3 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 4 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கடலைப்பருப்பு அரிசி உப்புமா
காலையில் எழுந்ததும் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? அதிலும் வித்தியாசமான சுவையில் அதே சமயம் ஆரோக்கியத்தை தரும் வகையில் என்ன சமைப்பது என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் கடலைப்பருப்பு அரிசி உப்புமாவை செய்யுங்கள்.
இந்த ரெசிபியை செய்வது மிகவும் ஈஸி. இப்போது அந்த கடலைப்பருப்பு அரிசி உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு
-
1
கப்
புழுங்கல்
அரிசி
-
1
கப்
வெங்காயம்
-
2
(பொடியாக
நறுக்கியது)
பச்சை
மிளகாய்
-
2
வரமிளகாய்
-
3
கடுகு
-
1
டீஸ்பூன்
உளுத்தம்
பருப்பு
-
2
டீஸ்பூன்
சீரகப்
பொடி
-
1/2
டீஸ்பூன்
பெருங்காயத்
தூள்
-
1
சிட்டிகை
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
1
டேபிள்
ஸ்பூன்
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பு மற்றும் புழுங்கல் அரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இட்லி தட்டில் அரைத்து வைத்துள்ள மாவை இட்லிகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.
பிறகு அந்த இட்லியை ஒரு தட்டில் உதிர்த்துவிட்டுக் கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் சீரகப் பொடியைப் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சுவையான கடலைப்பருப்பு அரிசி உப்புமா ரெடி!!!