Just In
- 9 min ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 3 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 9 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 9 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
Don't Miss
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அவரைக்காய் பொரியல்
அவரைக்காய் அனைவருக்குமே மிகவும் பிடித்த காய்கறிகளுள் ஒன்று. அதிலும் அவரைக்காயை பொரியல் செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். பெரும்பாலும் இந்த பொரியல் தென்னிந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது.
இப்போது அந்த அவரைக்காய் பொரியலை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
அவரைக்காய்
-
1/4
கிலோ
பெரிய
வெங்காயம்
-
1
(நறுக்கியது)
தக்காளி
-
1
(நறுக்கியது)
பூண்டு
-
4
பற்கள்
(தட்டியது)
கடுகு
-
1/2
டீஸ்பூன்
உளுத்தம்
பருப்பு
-
1
டீஸ்பூன்
கடலைப்பருப்பு
-
1/2
டீஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
மிளகாய்
தூள்
-
1/2
டீஸ்பூன்
மல்லி
தூள்
-
1/2
டீஸ்பூன்
மஞ்சள்
தூள்
-
1/4
டீஸ்பூன்
தேங்காய்
-
1/4
கப்
(துருவியது)
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் அவரைக்காயை கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பூண்டு சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு நறுக்கிய அவரைக்காயை சேர்த்து, 2 நிமிடம் கிளறி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து தண்ணீர் நன்கு சுண்டும் வரை வேக வைக்க வேண்டும்.
தண்ணீரானது முற்றிலும் சுண்டியவுடன், துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி!!!