Just In
- 1 hr ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 9 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 10 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
Don't Miss
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நவராத்திரி ஸ்பெஷல்- தேங்காய் போளி எப்படி செய்யலாம்?
நவராத்திரி என்றாலே உங்களுக்கு ஞாபகம் வருவது கொலுதானே. விதமான அழகழகான பொம்மைக் கொலுவை வைத்து, எல்லாரையும் அழைத்து, பிரசாதம் கொடுத்து ஒவ்வொரு நாளும் திருவிழாவாக இந்த 9 நாட்களையும் கொண்டாடுவோம்.
தினம் ஒரு பலகாரம் செய்து ஸ்வாமிக்கு படைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் கடக்கும்போது யோசித்தபடியே இருப்போம்.
இன்றைக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த தேங்காய் பூரண போளி செய்து பாருங்களேன். அதை செய்வதற்கு தேவையானவை என்ன என்று பார்ப்போம்.
செய் முறை :
முதலில் மைதா மாவில் மஞ்சள் உப்பு தலா ஒரு சிட்டிகை போட்டு, சிறிது சிறிதாக நீர் விட்டு பிசையுங்கள். நன்றாக கைகளில் ஒட்டாத அளவிற்கு பிசையுங்கள்.
செய் முறை :
பின்னர் அதில் தேங்காய் எண்ணெய் கலந்து நன்றாக அடித்து பிசைந்து, மாவை ஒரு பக்கம் சுமார் 20 நிமிடங்கள் வைத்திருங்கள்.
செய்முறை :
பின்பு கொதிக்கும் நீரில் வெல்லம் கலந்து கரையும் வரையில் ஒரு கொதி விடுங்கள்.
செய்முறை :
கல், மண் களைய அதனை வடிகட்டிக் கொள்ளுங்கள்.
பின்னர் கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெல்ல நீரை ஊற்றி கெட்டியாகும் பதம் வரை கொதிக்க விடுங்கள்.
செய்முறை :
லேசாக கெட்டிபதத்தில் வரும்போது தேங்காய் துறுவல், பொடித்த ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்கவும்.
ஒன்றாக சேர்ந்து பூரணம் ஆகும் வரை அடுப்பை குறைந்த தீயில் வைத்து கிளறவும். அதன் பிறகு சில நிமிடம் ஆறவிடுங்கள்.
செய் முறை :
இப்போது மாவினை ஒரு உருண்டை அளவு எடுத்து அதனை சப்பாத்தி போல் சிறிய அளவில் தேய்க்கவும்.
இதனுள் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, சப்பாத்தி போல தேய்க்கவும். ஒட்டாமலிருக்க நெய்யை தடவிக் கொள்ளுங்கள்.
செய் முறை :
புதிதாக செய்பவர்களுக்கு கைகளால் செய்ய வரவில்லையென்றால், சப்பாத்தி கட்டையில் தேய்க்கவும்.
செய் முறை :
நாசூக்காகவும் மெதுவாகவும் செய்ய வேண்டும். இல்லையெனில் பூரணம் வெளியே வந்துவிடும். பின்னர் தோசைக் கல்லில் போட்டு மிதமான தீயில் நெய்யில் சுட்டு எடுக்கவும்.