Just In
- 47 min ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 4 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மோத்தி சூர் லட்டு
தேவையான பொருட்கள்:
கடலை
மாவு
-
2
கப்
பால்
-
500
மிலி
ஏலக்காய்
தூள்
-
1
டீஸ்பூன்
நெய்
-
3
கப்
பாதாம்
-
சிறிது
பிஸ்தா
-
சிறிது
பாகுவிற்கு...
சர்க்கரை
-
2
கப்
தண்ணீர்
-
3
கப்
பால்
-
2
டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, நன்கு உருக வைத்துக் கொள்ளவும். பின் அதில் பாகுவிற்கு குறிப்பிட்டுள்ள பாலை ஊற்றி 3-4 நிமிடம் கொதிக்க விடவும். அப்போது சிறிது நேரம் கழித்து மேலே நுரை போல் வரும். அந்நேரத்தில் அதில் ஏலக்காய் தூள் சேர்த்து, நிறத்திற்கு கேசரிப் பவுடர் சேர்த்து, நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின்னர் மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவையும், பாலையும் ஊற்றி நன்கு மென்மையாக கரைத்துக் கொள்ளவும். பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், ஒரு ஓட்டையாக இருக்கும் கரண்டியை எடுத்து, அதன் ஓட்டையில் இந்த கடலை மாவு கலவையை ஊற்றவும்.
* இதனால் அந்த மாவு துளி துளியாக எண்ணெயில் விழுந்து, பூந்தி போன்று பொரியும். அதனை நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்து, மீதமுள்ள மாவையும் இதேப்போல் செய்ய வேண்டும்.
* இப்போது பொரித்து வைத்துள்ள பூந்தியை தட்டில் போட்டு, அதன் மேல் சர்க்கரை பாகுவை ஊற்றி, பரப்பி விடவும். பின்னர் அதில் லேசாக சூடான நீரை தெளித்து, லட்டு போன்று பிடித்து வைக்கவும், பின் அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
இப்போது சுவையான மோத்தி சூர் லட்டு ரெடி!!!