Just In
- 26 min ago இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- 36 min ago கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- 1 hr ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 2 hrs ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
Don't Miss
- Movies இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வரலட்சுமி ஸ்பெஷல் ரெசிபி: கேரட் பாயாசம்
வரலட்சுமி பூஜைக்கு நிறைய பலகாரங்கள் செய்து வைத்திருப்போம். அதிலும் விஷேசம் என்றால், அனைவரது வீட்டில் நிச்சயம் பாயாசம் செய்வோம். அந்த பாயாசத்தில் நிறைய வகைகள் உள்ளன. அதில் இப்போது சற்று வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ஒரு பாயாசத்தைப் பார்க்கப் போகிறோம்.
அது என்னவென்றால், கேரட் கொண்டு செய்யப்படும் பாயாசம். இந்த பாயாசத்தின் சுவை வித்தியாசமானதாகவும், அதே சமயம் மிகுந்த சுவையுடனும் இருக்கும். இப்போது அந்த கேரட் பாயாசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கேரட்
-
2
(பெரியது)
சேமியா
-
2-3
டேபிள்
ஸ்பூன்
பால்
-
3
கப்
கண்டென்ஸ்ட்
மில்க்
-
1/4
கப்
சர்க்கரை
-
3
டேபிள்
ஸ்பூன்
ஏலக்காய்
பொடி
-
1/4
டீஸ்பூன்
நெய்
-
1/2
டீஸ்பூன்
பிஸ்தா/முந்திரி
-
3-4
டேபிள்
ஸ்பூன்
(நறுக்கியது)
செய்முறை:
முதலில் கேரட்டின் தோலை சீவி விட்டு, நறுக்கி நீரில் போட்டு நன்கு மென்மையாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, வேக வைத்த தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியா போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி, பாலானது கொதிக்கும் போது, அதில் சேமியாவைப் போட்டு, 3 நிமிடம் வேக வைத்து, பிறகு அரைத்து வைத்திருக்கும் கேரட்டை போட்டு கிளறி விட வேண்டும்.
அடுத்து கண்டென்ஸ்ட் மில்க் மற்றும் சர்க்கரை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதன் மேல் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பிஸ்தா/முந்திரி சேர்த்து கிளறி, அடுப்பில் இருந்து இறக்கினால், சுவையான கேரட் பாயாசம் ரெடி!!! விருப்பப்பட்டால் இதன்மேல் சிறிது உலர் திராட்சையை தூவி அலங்கரித்தும் பரிமாறலாம்.