Just In
- 58 min ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 2 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 6 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 11 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- News அரசு பள்ளியில் அசிங்கமா சிக்கிய சங்கீதா டீச்சர்.. பியூட்டிஷியனுடன் கிச்சனில்.. போலீசுக்கு போன வீடியோ
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நெத்திலி கருவாட்டு குழம்பு
பலருக்கு மீன் குழம்பை விட கருவாட்டு குழம்பு தான் மிகவும் பிடிக்கும். ஏனெனில் மீன் குழம்பை விட, கருவாட்டு குழம்பு தான் மிகவும் வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும். இங்கு கருவாட்டில் ஒரு வகையான நெத்திலி கருவாட்டைக் கொண்டு செய்யப்படும் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஈஸியான செய்முறை.
உங்களுக்கு கருவாட்டு குழம்பு செய்யத் தெரியாதெனில், இங்கு கொடுக்கப்பட்டுள்ள நெத்திரி கருவாட்டு குழம்பின் செய்முறையைப் படித்து, அதன்படி செய்து பாருங்கள். சரி, இப்போது அதைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
நெத்திலி
கருவாடு
-
1
கப்
கத்திரிக்காய்
-
3
(நறுக்கியது)
மஞ்சள்
தூள்
-
1
டீஸ்பூன்
மல்லித்
தூள்
-
1
டீஸ்பூன்
சீரகப்
பொடி
-
1/2
டீஸ்பூன்
மிளகாய்
தூள்
-
2
டீஸ்பூன்
மிளகுத்
தூள்
-
1/2
டீஸ்பூன்
வறுத்த
அரிசி
மாவு
-
1
டீஸ்பூன்
வெங்காயம்
-
1
(பொடியாக
நறுக்கியது)
தக்காளி
-
1
(நறுக்கியது)
துருவிய
தேங்காய்
-
1/2
கப்
புளி
-
1
எலுமிச்சை
அளவு
கறிவேப்பிலை
-
சிறிது
கடுகு
-
1
டீஸ்பூன்
பூண்டு
-
5
பற்கள்
எண்ணெய்
-
1/2
கப்
உப்பு
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் கருவாடை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை நீரில் 3 கப் தண்ணீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு தேங்காய் மற்றும் வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை புளிச்சாற்றில் சேர்த்து கலந்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தக்காளியை சேர்த்து கையால் நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பூண்டை தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து தாளித்து, பின் கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
பின் அதில் கருவாடை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், மிளகுத் தூள், வறுத்த அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, மசாலா அனைத்து ஒன்று சேரும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் புளிக் கரைசலை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், நெத்திலி கருவாட்டு குழம்பு ரெடி!!!
Image Courtesy: anthimaalai