Just In
- 55 min ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 1 hr ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 3 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 6 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
Don't Miss
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- Sports சிக்சர் மன்னன் சிவம் துபே சாதனை.. 27 பந்தில் 66 ரன்கள் குவிப்பு.. 7 சிக்சர் விளாசி ரெக்கார்ட்
- News ‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம்
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காரசாரமான... குட்டநாடன் மீன் குழம்பு
ஆந்திராவைப் போலவே கேரள உணவுகளும் மிகவும் காரமாக இருக்கும். அதிலும் கேரளாவில் மீன் குழம்பு தான் மிகவும் பிரபலமானது. அதிலும் குட்டநாடன் மீன் குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் குடம்புளி தான் காரணம்.
சரி, இப்போது அந்த குட்டநாடன் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து விடுமுறை நாட்களில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மீன்
-
1
கிலோ
புளி
(குடம்புளி)
-
4
துண்டுகள்
உப்பு
-
தேவையான
அளவு
தேங்காய்
எண்ணெய்
-
2
டேபிள்
ஸ்பூன்
கடுகு
-
1/2
டீஸ்பூன்
வெந்தயம்
-
1
டீஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
சின்ன
வெங்காயம்
-
10
(நறுக்கியது)
பூண்டு
-
6-7
(நறுக்கியது)
இஞ்சி
-
1
இன்ச்
(நறுக்கியது)
பச்சை
மிளகாய்
-
2-3
(நறுக்கியது)
காஷ்மீரி
மிளகாய்
தூள்
-
1-2
டேபிள்
ஸ்பூன்
மல்லித்
தூள்
-
1
டீஸ்பூன்
மஞ்சள்
தூள்
-
1/4
டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் குடம்புளி அல்லது புளியை 1 கப் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலி அல்லது மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம் சேர்த்து 10 நொடிகள் தாளித்து, பின் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அதற்குள் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூளை 3-4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொண்டு, வாணலியில் ஊற்றி, குறைவான தீயில் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு ஊற வைத்த குடம்புளியை நன்கு கையால் பிசைந்து, அதனை அப்படியே வாணலியில் ஊற்றி, வேண்டுமானால் அத்துடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் மீன் துண்டுகளை சேர்த்து, மிதமான தீயில் 20 நிமிடம் நன்கு மீனை கொதிக்க விட்டு இறக்கி, 30 நிமிடம் மூடி வைத்து, பின் பரிமாறினால், குட்டநாடன் மீன் குழம்பு ரெடி!!!
Image Courtesy: vazhayila