Just In
- 1 hr ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 2 hrs ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 3 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 3 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கர்ப்பிணிகள் எதுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யணும் தெரியுமா?
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வோம். இவ்வாறு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். எப்படியெனில், அல்ட்ராசவுண்ட் கருவியை வயிற்றில் தேய்க்கும் போது, அதிலிருந்து வரும் சப்த அலைகள், வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவுகளை அப்படியே திரையில் வெளிக்காட்டும். மேலும் என்ன தான், அது குழந்தைக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்தாலும், அதன் மூலம் குழந்தையின் தற்போதைய நிலை மற்றும் ஆரோக்கியத்தை கண்டறிய முடியும்.
மேலும் இந்த ஸ்கேன் மூலம், பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய பிரச்சனையையும் முன்பே கண்டறியலாம். சரி, இப்போது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!!!
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
* அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தால், கருவில் உள்ள சிசுவின் இதயத்துடிப்பை பரிசோதிக்க முடியும். அதிலும் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இதனைக் கொண்டு குழந்தையின் இதய ஆரோக்கியத்தை கண்டறியலாம்.
* கர்ப்பிணிகள் இந்த ஸ்கேன் செய்வதன் மூலம், குழந்தையின் நிலையை அறிய முடியும். இதனால் குழந்தை இடம் மாறி இருந்தால், முன்பே நன்கு தெரிந்து கொள்ளலாம்.
* நஞ்சுக் கொடி எந்த பகுதியில் உள்ளது என்பதையும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் அறியலாம். பொதுவாக நஞ்சுக்கொடியானது கர்ப்ப காலத்தில் கருப்பையின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இருக்கும். ஆனால் நஞ்சுக்கொடியானது 7 மாதத்திற்கு பின், கருப்பை வாயை மூடியவாறு இருந்தால், அதற்கு சரியான பராமரிப்பு கொடுக்க வேண்டும்.
* பொதுவாக அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங்கானது 11-14 வாரத்திற்குள் செய்யப்படும். இவ்வாறு செய்தால், குழந்தைக்கு மனநலிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* கர்ப்பிணிகளுக்கு 18-20 வாரங்களில் அனாமலி ஸ்கேன் மேற்கொள்ளப்படும். இந்த ஸ்கேன் மூலம், குழந்தைக்கு ஏதேனும் பிறப்பு குறைபாடு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். மேலும் 20-வது வாரத்தில் ஸ்கேன் செய்தால், குழந்தை ஒரு வடிவத்தில் வந்துவிடும். இதனால் தண்டுவடம், மூளை மற்றும் இதர உள்ளுறுப்புக்களை சோதனை செய்து, அதில் பிரச்சனைகள் இருந்தால், அதை தெரிந்து கொள்ளலாம்.