Just In
- 4 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 5 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 5 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 6 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கர்ப்பமாக இருக்கும் போது சந்திக்கக்கூடும் 10 பிரச்சனைகள்!!!
ஒரு பெண் வாழ்வின் முழு நிலையை அடைய தாய்மை நிலையை அடைய வேண்டும். சிலருக்கு அத்தகைய தாய்மையை அடைவதிலேயே பல பிரச்சனைகள் எழும். அதற்கு போதிய சிகிச்சையை மேற்கொண்டால், விரைவில் தாய்மை அடையலாம். அவ்வாறு தாய்மை அடைந்த பின்னரும், பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது அனைத்து பெண்களிடமும் நிகழும் ஒரு பொதுவான பிரச்சனையே. இத்தகைய பிரச்சனைகள் சந்திக்கும் போது, அதனை போக்கும் வகையில் செயல்பட்டால் நல்லது. இல்லாவிட்டால், அது பல பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
சில கர்ப்பிணிகள் கர்ப்பமாக இருக்கும் போது, உடலில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அது கருவில் உள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமோ என்று பயப்படுவார்கள். ஆனால் ஒருசில பிரச்சனைகள் கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படக்கூடியவையே. இப்போது அத்தகைய பிரச்சனைகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
வீக்கங்கள்
கர்ப்பிணிகள் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் வீக்கங்கள். ஆம், இந்த காலத்தில் கர்ப்பிணிகளின் கை மற்றும் கால்கள் மற்றும் சில நேரத்தில் முகம் கூட வீக்கத்துடன் காணப்படும். இவ்வாறு கால்கள் வீங்கி காணப்பட்டால், நடப்பது சிரமமாக இருக்கும். அதுவே வீக்கத்துடன், காலை சோர்வு மற்றும் பார்வை கோளாறு இருந்தால், அது மிகவும் ஆபத்தானது. இந்த மாதிரியான நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
வாசனை மற்றும் சுவையில் மாற்றம்
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்சனை தான் வாசனை மற்றும் சுவையில் மாற்றம். கர்ப்ப காலத்தில் சில உணவுகள் வாந்தியை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கும். எதையும் சரியாக சாப்பிட முடியாதவாறு இருக்கும். இதற்கு பயப்பட வேண்டாம். இத்தகைய நிலை நாளடைவில் மறைந்துவிடும்.
காய்ச்சல்
சில சமயங்களில் கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல் வரும். ஆனால் அந்த காய்ச்சலானது நீண்ட நாட்கள் தொடர்ந்தாலோ அல்லது 100 டிகிரிக்கு மேல் உடல் வெப்பமானது இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இல்லாவிட்டால், அது கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
வாந்தி
முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான் வாந்தி. இவ்வாறு தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், உடல் பலவீனமடைவதுடன், உடலில் வறட்சியும் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் சிலருக்கு கடைசி மூன்று மாதங்களில் வாந்தியானது ஏற்படும். அதிலும் காய்ச்சல் மற்றும் உடல் வலியுடன் ஏற்படும். மேலும் அதிகப்படியாக வாந்தி எடுத்தால், குழந்தை மிகவும் குறைவான உடல் எடையில் பிறக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல், வலியுடன் கூடிய வாந்தி எடுத்தால், அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வாந்தி வந்தால், அதனை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
எடை அதிகரித்தல்
கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர உடல் எடை அதிகரிக்கும் தான். ஆனால் அவ்வாறு உடல் எடை அதிகரிப்பதற்கும் ஒரு அளவு உள்ளது. அந்த அளவை மீறி உடல் எடை அதிகரித்தால், அது மிகவும் கஷ்டமாகிவிடும். எனவே, இந்த நேரத்திலும் எடையில் சற்று கவனம் வேண்டும்.
இரத்தப் போக்கு
கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு இரத்தப் போக்கு ஏற்படும். அதிலும் அந்த இரத்தப் போக்கானது முதல் மூன்று மாதங்களிலோ அல்லது அதற்கு முன்பாகவோ ஏற்பட்டால், கருச்சிதைவு ஏற்படுவதற்கோ அல்லது குறைபிரசவம் நடைபெறுவதற்கோ வாய்ப்புள்ளது. இந்த நிலையில் மருத்துவரிடம் சென்றால், நல்ல ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதுவே இறுதி மூன்று மாதங்களில் இரத்தக் கசிவு ஏற்பட்டால், அது வேறு சில சிக்கலான பிரசவத்திற்கு வழிவகுப்பதற்கான அறிகுறியாக இருக்கும்.
அடிவயிற்றில் வலி
சில கர்ப்பிணிகளுக்கு அடிவயிற்றில் வலி ஏற்படும். இதற்கு செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனனையே காரணமாக இருக்கும். சில நேரங்களில் குமட்டலுடன் சேர்ந்து அடிவயிற்றில் வலி ஏற்படும். இவ்வாறு ஏற்பட்டால், அது வயிற்றில் வைரஸ் தாக்கியிருப்பதற்கான அறிகுறியாக இருக்கும். ஆகவே இந்த நிலையில் மருத்துவரை உடனே அணுகுவது இன்றியமையாதது.
தலைவலி
நிறைய பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது தலைவலிக்கு ஆளாவார்கள். இதுவும் இத்தகைய தலைவலியானது நீண்ட நேரம் இருக்கும். இதனால் உடல் களைப்படைவதுடன், எரிச்சல் மற்றும் தொந்தரவுக்கு ஆளாகக்கூடும். இதனால் தான் சில பெண்கள் கர்ப்ப காலத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
கீழ்முதுகு வலி
கர்ப்பத்தின் போது அதிகப்படியான சுமையை சுமப்பதால், பெண்களுக்கு கீழ்முதுகில் வலியானது ஏற்படும். அதிலும் நீண்ட நேரம் உட்கார்ந்தாலோ அல்லது நின்றாலோ தான், இந்த பிரச்சனை ஏற்படும். ஆகவே இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட, பெண்கள் படுத்து ஓய்வு எடுப்பது மிகவும் அவசியமாகும்.
மலச்சிக்கல்
கர்ப்பமாக இருக்கும் போது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவது பொதுவானவையே. அதிலும் முதல் மூன்று மாதங்களில் இந்த பிரச்சனை ஏற்படும். ஏனென்றால், கர்ப்பத்தின் போது உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதே காரணம். ஆகவே சரியான நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு, முறையான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றினால், நிவாரணம் கிடைக்கும்.