Just In
- 45 min ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 1 hr ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 3 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 4 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- Automobiles மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிரசவத்தைப் பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்!!!
உலகில் உள்ள பல பெண்கள் தாய்மை அடைவது என்பது ஒரு இனிமையான அனுபவம் என்று சொல்வார்கள். ஆனால் பிரசவம் என்று வரும் போது, அந்த அனுபவத்தையும் யாராலும் மறக்க முடியாது. அதுமட்டுமின்றி, பிரசவத்தின் போது சந்திக்கும் சிலவற்றையும் மறக்கவே முடியாது.
குறிப்பாக பிரசவத்தில் சிசேரியனை விட சுகப்பிரசவம் தான் சிறந்தது என்று சொல்வார்கள். ஏனெனில் சிசேரியன் பிரசவத்திற்கு பின் எடை அதிகரிப்பதுடன், வயிற்றில் கடுமையான வலி மற்றும் பல நாட்களுக்கு முதுகு வலியை சந்திக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல், தையல் போட்டிருப்பதால், அது ஆறுவதற்கு சில நாட்கள் ஆகும் என்ற காரணத்தினால் தான். ஆனால் சுகப்பிரசவத்திலும் ஒருசில சிக்கல்களை சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா?
சுகப்பிரசவம் எளிமையாக நடைபெறுவதற்கான சில எளிய டிப்ஸ்...
அதிலும் பிரசவம் நடைபெறும் போது அந்த விஷயங்கள் நடைபெறும். அதை யாரும் முன்பே சொல்லமாட்டார்கள். ஆனால் தமிழ் போல்ட் ஸ்கை சுகப்பிரசவத்தின் போது நடைபெறும் சில இரகசியங்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மலம் அதிகம் வெளியேறும்
சுகப்பிரசவத்தின் போது குழந்தை வெளிவர முயலும் போது, நீங்களும் வயிற்றில் அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்க நேரிடும். அச்சமயத்தில் அதிகப்படியாக மலம் வெளியேறும். ஆகவே அப்போது அதிர்ச்சியடையாமல், நல்ல படியாக குழந்தையைப் பெற்றெடுங்கள்.
அசிங்கமான ஸ்ட்ரெட்ச் மார்க்குகள்
சுகப்பிரசவத்திற்கு பின் வயிற்றில் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் அவ்வளவு எளிதில் போகாது. இதுவும் யாராலும் மறுக்க முடியாத ஒன்று.
சிரிக்க முடியாது
பிரசவம் முடிந்த பின்னர் சிரிக்க முடியாது. ஏனெனில் அப்போது வாயை திறந்து பேசினாலே சிறுநீர் வெளியேறும். ஆகவே இதுவும் பிரசவத்திற்கு பின் பெண்கள் சந்திப்பவைகளில் ஒன்று.
இரத்தப்போக்கிற்கு முடிவே இல்லை
பொதுவாக மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கானது 4-5 நாட்கள் இருக்கும். ஆனால் பிரசவத்திற்கு பின், இரத்தப்போக்கு ஆரம்பித்தால், அப்போது அது நிற்பதற்கு பல நாட்கள் ஆகும். இது பெண்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
சிறுநீர் வெளியேறும்
பிரசவத்தின் போது மலம் மட்டும் வெளியேறாது, அதனுடன் சேர்ந்து சிறுநீரும் வெளியேறும். இதையும் யாரும் சொல்லமாட்டார்கள்.