Just In
- 9 min ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 45 min ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 1 hr ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- 1 hr ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
Don't Miss
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Sports DC vs GT : டாப் ஆர்டரில் அசத்திய அக்சர் படேல்.. ஜடேஜாவை பொளக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தாய்ப்பாலின் சுரப்பை நிறுத்துவதற்கான சில இயற்கை வழிகள்!!!
குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது தான் தாய்ப்பால். ஏனெனில் இதிலிருந்து தான் குழந்தைகளுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். மேலும் அவர்களுக்கு வேண்டிய நோயெதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் இருந்து தான் கிடைக்கும். இத்தகைய தாய்ப்பாலை குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரைக் கொடுப்போம்.
ஏனெனில் எந்த அளவில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இன்றியமையாததோ, அதேப் போல் அவர்கள் வளர வளர மற்ற உணவுகளும் மிகவும் முக்கியமானது. எனவே பல தாய்மார்கள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். அதனால் நாளடைவில் குழந்தைகளும் தாய்ப்பாலை மறந்துவிடுவார்கள். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினாலும், ஒரு கட்டத்தில் மார்பகங்களில் இருந்து தாய்ப்பால் தானாக வெளியேறும்.
இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை பின்பற்றினால், நிச்சயம் தாய்ப்பால் வெளியேறுவதை நிறுத்தலாம்.
முட்டைகோஸ்
தாய்ப்பால் வடிவதை தடுக்க ஒரு சிறந்த வழியென்றால், குளிர்ச்சியான முட்டைகோஸ் இலைகளை மார்பகங்களில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு செய்தால், தாய்ப்பால் வற்றிவிடும்.
சேஜ் டீ
ஒருவேளை முட்டைகோஸின் இலைகள் வேலை செய்யாவிட்டால், சேஜ் இலையால் செய்யப்பட்ட டீயை, தினமும் மூன்று முறை குடித்து வந்தால், தாய்ப்பாலின் உற்பத்தி குறைந்துவிடும்.
தண்ணீர்
தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், தாய்ப்பாலின் உற்பத்தியைத் தடுக்கலாம். ஒருவேளை உடலில் வறட்சி ஏற்பட்டால், அது தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரித்துவிடும்.
புதினா
புதினாவின் சுவையுள்ள எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்டாலும், தாய்ப்பால் வற்றிவிடும். எனவே தினமும் புதினா டீ அல்லது புதினாவின் சுவைக் கொண்ட உணவுப் பொருளை உட்கொண்டால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
ஐஸ் பேக்
இயற்கை வழியில் தாய்ப்பாலின் சுரப்பைத் தடுக்க வேண்டுமானால், தினமும் இரண்டு முறை ஐஸ் கட்டிகளைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்து வர வேண்டும்.