Just In
- 2 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 3 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 6 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 7 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
குழந்தைகளுக்கு ஆபத்து உங்கள் வீட்டில் தான்.!
1- 3 வயதுள்ள குழந்தைகளை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும். எமர்ஜென்ஸி வார்டுகளில் வரும் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஆபத்து வீட்டில்தான் நேரிடுகிறது என ஜான் ஹாப்கின் பல்கலைக்கழகத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் ஸ்டெர்லிங் ஹேரிங் கூறுகிறார்.
குழந்தைகளுக்கு இந்த 1- 3 வயதுகளில் ஏதாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும் என தோன்றும். அவர்களுக்கு இது ஆபத்து, இது நல்லது எனவும் தெரியாது. பெரும்பாலான பெற்றோர்கள் ஆபத்து நிறைந்த ஆசிட், ஸ்ப்ரே, மற்றும் தரை துடைக்கும் க்ளீனர் ஆகியவற்றை அவர்களின் கைக் கெட்டும் தூரத்தில் வைக்கிறார்கள்.
எல்லாவற்றையும் வாயில் வைக்கும் அந்த பருவத்தில் அவர்கள் விளைவுகளை தெரியாமல், ஸ்ப்ரே, க்ளீனர் ஆகியவற்றை விழுங்க அல்லது கண்ணில் பட நேரிடுகிறது. கண்களை இழக்கும் அபாயங்களும் உண்டாகிறது. பெரும்பாலான குழந்தைகள் இதனால் கண்பார்வை இழக்க நேரிடுகிறது.
ஹேரிங்க் மற்றும் அவரது உதவி ஆராய்ச்சியாளர்களும் கடந்த 4 வருடங்களாக சுமார் 900 மருத்துவமனைகளில் ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார்கள். இதில் வரும் எல்லா குழந்தைகள் நல எமர்ஜென்சி வார்டுகளிலுருந்தும் கணக்கெடுப்பு நடத்தி இந்த ஆய்வை சமர்ப்பித்திருக்கிறார்கள்.
இதில் தெரிய வந்தது என்னவென்றால், பெரும்பாலான கீழ் மற்றும் மத்திய வர்க்கத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு எட்டும் தூரத்திலேயே ஆபத்து நிறைந்த பொருட்களை வைக்கிறார்கள். இதனால் அவற்றை குடித்து, அல்லது கண்களில் பட்டு ஆபத்து நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த மாதிரியான நேரங்களில் கட்டாயம் முதலுதவி செய்து மருத்துவ மனைகளில் கூட்டி வந்தால் ஆபத்தை தடுக்கலாம். கண்களில் ஆசிட் அல்லது ஸ்ப்ரே பட்டால் உடனடியாக கண்களை கழுவிடவேண்டும் என்பதே பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை. இதனால் விஷத்தின் வீரியத்தை குறைக்கலாம்.