Just In
- 53 min ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 3 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 5 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 5 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
Don't Miss
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
குழந்தைகளிடம் எப்போதும் பெற்றோர்கள் சொல்லக்கூடாத விஷயங்கள்!!!
உங்கள் குழந்தை ரொம்ப சுட்டியா? அதனால் அவர்களிடம் சற்று முரட்டுத்தனமாக நடந்து கொள்வீர்களா? அப்படியெனில் உங்கள் குழந்தைக்கு உங்கள் மீது வெறுப்பு தான் அதிகரிக்கும். ஏனெனில் குழந்தைகளுக்கு எப்போது எப்படி நடக்க வேண்டும் என்று தெரியாது. பெற்றோர்களாகிய நீங்கள் தான் அவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
முக்கியமாக குழந்தைகளிடம் ஒருசிலவற்றை அடிக்கடி சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் அது அவர்களின் மனதில் கடுமையான காயத்தை ஏற்படுத்துவதோடு, அவர்கள் உங்கள் வெறுக்க ஆரம்பிப்பார்கள். எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையிடம் எதை சொல்லக்கூடாது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சரி, இப்போது அவை என்னவென்று பார்ப்போமா!!!
கொஞ்சம் தனியா விடு!
குழந்தைகள் எவ்வளவு தான் கோபமாக இருந்தாலும், தாயிடம் தான் அரவணைப்பைத் தேடும். எனவே நீங்கள் உங்கள் குழந்தையை கோபமாக திட்டினாலோ அல்லது அடித்தாலோ, குழந்தை உங்களருகில் வரும் போது, அவர்களை அணைத்து அவர்கள் புரியும் படி சொல்ல வேண்டும். அதைவிட்டு 'என்னிடம் பேசாததே, கொஞ்சம் தனியாக விடு' என்று சொல்வது குழந்தையின் மனதை பாதிக்கும்.
எதிர்மறையாக பேசுவது
உங்கள் குழந்தை சோம்பேறியாகவோ அல்லது அனைத்திலும் மெதுவாகவோ இருந்தால், அப்போது அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசாமல் எதிர்மறையாகவே பேசினால், அது கூட குழந்தைகளின் மனதில் கோபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தும்.
உன் சகோதரன்/சகோதரி போல் இரு...
எப்போதுமே ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவது மிகவும் அபத்தமான செயல். அப்படி எந்நேரமும் பெற்றோர்கள் ஒப்பிட்டு பேசினால், அது குழந்தையின் மனதில் பெரும் கோபத்தை உண்டாக்கும். ஆகவே எக்காரணம் கொண்டும் ஒப்பிட்டு பேசுவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.
நான் சொல்வதை மட்டும் செய்
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆசை என்பது இருக்கும். அத்தகைய ஆசையை ஒவ்வொரு பெற்றோரும் குழந்தையிடம் தவறாமல் கேட்டு, அதை நிறைவேற்ற முயல வேண்டுமே தவிர, உங்கள் ஆசைகளை அவர்களின் மனதில் பதித்து, அதை செய்யச் சொல்லாதீர்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையே பாழாகிவிடும்.