Just In
- 22 min ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 1 hr ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 1 hr ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 3 hrs ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
Don't Miss
- Movies Pandian stores 2 serial: பாண்டியனை அடித்த குமரன்.. அப்பாவுக்காக மல்லுக்கு நின்ற கதிர்!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிசேரியனுக்கு பிறகு குழந்தையை தொட்டு தூக்கியதற்கு 2,000 பில் போட்டு அதிர வைத்த மருத்துவமனை!
தற்போது ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனைகள் என்ற பெயரில் பிரசவத்திற்கு, கண்களுக்கு, இதயத்திற்கு, ஈ.என்.டி, மூட்டு என தனித்தனியாக மருத்துவமனைகள் பிரிந்தாலும் பிரிந்தது, அவர்கள் போடும் பில்லு தாறுமாறாக ஏறுகிறது. கேட்டால் நாங்க கொஞ்சம் ஸ்பெஷலாக்கும் என கூறுகின்றனர்.
ஐ.சி.யு, ஐ.சி.சி.யூ, சி.சி.யூ, ஸ்பெஷல் பெட், நார்மல் பெட், ஜெனரல் வார்ட் என மருத்துவமனைகள் 5 ஸ்டார் ஹோட்டல்கள் ரேஞ்சுக்கு மாறிவிட்டன. இப்படி வகைவகையாக நம்மிடம் பில்லு போட இவர்கள் பல விஷயங்களை செய்து நாம் பார்த்திருக்கிறோம். ஏன் ரமணா ஸ்டைல் மருத்துவமனைகள் கூட ஊரூருக்கு ஒன்றிரண்டு இருக்கின்றன.
ஆனால், பெற்ற குழந்தையை தாய் தொட்டு தூக்கியதற்கு எல்லாம் இரண்டாயிரம் பில் போடுவது இந்த விதத்தில் நியாயம்???
$39.35
இது எந்த டாலர் நாடு என தெரியவில்லை. Imgur எனும் புகைப்படம் பகிரும் இணையத்தில், சமீபத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற தாய் ஒருவர் அவருக்கு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட பில்லை பகிர்ந்திருந்தார்.
அதில், சிசேரியன் முடிந்த பிறகு, தான் பெற்ற குழந்தையை தொட்டு தூக்கியதற்கு மருத்துவமனையில் $39.35 டாலர்கள் பில் போடப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதிவு!
அந்த பதிவில், அந்த புதிய தாய், "நான் பெற்ற குழந்தையை, தொட்டு தூக்குவதற்கு நான் $39.35 டாலர்கள் பில் கட்ட வேண்டியிருக்கிறது.." என குறிப்பிட்டு கூறியுள்ளார்.
Image Source
ஸ்கின் டூ ஸ்கின்!
அந்த பில்லில் மருத்துவமனை ஊழியர்கள், சிசேரியன் செய்த உடனேயே, ஸ்கின் டூ சிக்கின் டச்சில் அந்த தாய் குழந்தையை தூக்கியதற்கு என கூறப்பட்டுள்ளது.
இது சாதாரணம் தானே...
சிசேரியனோ, சுகப்பிரசவமோ, குழந்தை பிறந்தவுடன், தாய் தூக்குவது மிக சாதாரண விஷயம், மருத்துவர்களே முதலில் தாயிடம் தான் காண்பிப்பார்கள்.
இதற்கு ஏன் தனி பில் போட்டார்கள் என பலரும் அந்த பதிவின் கீழே கருத்து தெரிவித்துள்ளனர்.
எந்த ஊரு, எந்த ஹாஸ்பிடல்...
அந்த தாயின் பெயர் மற்றும் இடம் அந்த பதிவில் மறைக்கப்பட்டுள்ளது . அந்த பதிவை இதுவரை 60 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.