Just In
- 2 hrs ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 3 hrs ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 4 hrs ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 4 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- News கெஜ்ரிவாலை மரணத்தை நோக்கி தள்ளுகிறார்கள்! பாஜக மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்! அதிரும் தலைநகர் டெல்லி
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- Movies Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கேரளாவை சேர்ந்த 12 வயது சிறுவன் தந்தை ஆனான் - கற்பழிப்பு வழக்கில் பரபரப்பு!
கேரளாவை சேர்ந்த 12 வயது சிறுவன் தந்தை ஆன சம்பவம், கேரளாவில் பரபரப்பு!
காலையில் எழுந்ததும் டிவியில், நாளிதழில் ஏதோ இராசிபலன் பார்ப்பது போல தினந்தோறும் கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் செய்திகளில் வந்தவண்ணமே உள்ளன.
பாதிக்கப்படும் பெண்களுக்கு மட்டுமல்ல, பாதிப்பை உண்டாக்கும் ஆண்கள் மத்தியிலும் கூட வயது வரம்பு இல்லாமல் போய்விட்டது. மூன்று வயது குழந்தையில் இருந்து மூதாட்டி வரை பாதிக்கப்படுகின்றனர்.
இச்சை என்றால் என்ன என்று தெரியாத, பதின் வயதை கூட எட்டாத ஒரு 12 வயது சிறுவன் ஒரு பெண்ணை கற்பழித்து, அப்பா ஸ்தானம் அடைகிறான் என்றால்... நமது சமூகம் எதை நோக்கி செல்கிறது என்பதை சிந்திக்கவே அச்சமாக உள்ளது.
கேரளா!
கொச்சி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன், 17 வயது பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தையான சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சென்ற நவம்பர்!
12 வயது நிரம்பிய அந்த சிறுவன் சென்ற நவம்பர் மாதம் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண், பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
பெண் குழந்தை!
மரபணு பரிசோதனையில், பிறந்த பெண் குழந்தையின் தந்தை அந்த 12 வயது சிறுவன் தான் என தெரியவந்துள்ளது. அந்த பெண் கூறிய பிறகு தான் அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவர் சீர்திருத்த பள்ளி!
சிறுவனின் வயதை கருதி வழக்கு நீதி வாரியத்தின் கீழ் நடக்கவுள்ளது. மேலும், சிறுவன் இப்போது ஜாமீனில் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
எதனால் இப்படி?
கற்பழிப்பு சம்பவங்கள் ஒன்றும் புதிதில்லை என்ற போதிலும், இது போன்ற விசித்திர வழக்குகள் இன்று அதிகமாகி வருகிறது. பதின் வயதை கூட எட்டிடாத ஒரு சிறுவன் கற்பழித்தது மட்டுமின்றி, 12 வயதில் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையும் ஆகியுள்ளான் என்பது பலதரப்பட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் என்ன?
இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணம் என்ன? கற்பழிப்பு வழக்குகளில் சிக்குபவர்களுக்கு என்ன பெரிதாக தண்டனை கிடைத்துவிட போகிறது என்ற அச்சமின்மையா? ஊடகங்கள், சினிமாக்கள் கற்பழிப்பு என்பதை அதிகம் கவனம் செலுத்தி வெளிச்சமிட்டு காட்டும் பிம்பமா?
பெற்றோரும், சமூகமும்!
இந்த வயதில் இப்படி தான் இருக்க வேண்டும், இந்த செயல்களில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று கற்பிக்க பெற்றோருக்கு நேரமில்லை. தாத்தா, பாட்டி உறவும் இல்லை.
தன் குழந்தையையே சரியாக வளர்க்க நேரம் இல்லாமல் வாழும் இவர்கள், சமூகத்தில் வளரும் குழந்தையின் நலன் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவார்களா என்ன?
முந்தைய தலைமுறை!
முந்தைய தலைமுறையில், நாலு தெரு தள்ளி குடியிருக்கும் குழந்தைகள் கூட, யாருடைய பிள்ளை, அவரது குடும்பம் என்ன என்ற விவரம் தெரியும். எனவே, அவனை வேறு இடத்தில் கண்டால் கூட அதட்டி வீட்டுக்கு அனுப்புவர். ஆனால், இன்றோ, பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரிவதில்லை.
இப்படிப்பட்ட சமூக மாற்றமும், பெற்றோர் வளர்ப்பு தவறுகளும் தான் இது போன்ற தவறுகள் சமூகத்தில் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகின்றன.