Just In
- 13 min ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 1 hr ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 5 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கருச்சிதைவிற்கு பின் தொடர்ந்து வரும் பிரச்சனைகள்!!!
ஒரு பெண் என்பவள் தாய்மை அடைவதன் மூலமாகவே முழுமை அடைகிறாள். தான் கருவுற்றிருப்பதை கண்டறிந்த உடன் தன்னை மட்டுமல்லாது தனது வயற்றில் வளரும் குழந்தையையும் பேணி பாதுகாக்க தொடங்குவாள். இப்படி கற்பனை செய்து கொண்டிருக்கும் வேளையில் கருச்சிதைவு ஏற்பட்டால் அது அவர்களை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெரிதும் பாதிக்கும்.
கருச்சிதைவு என்பது வலிமிகுந்த வெளிப்பாடு. அதிலும், கருச்சிதைவிற்கு பின்னர் வரும் பிரச்சனைகள் மேலும் வலி மிகுந்தவை. நீங்கள் கருச்சிதைவை விரும்பாதவராக இருந்தாலும் கருச்சிதைவின் பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்ளுவது மிகவும் அவசியமானதாகும். கருச்சிதைவை சட்டரீதியாக கொண்டுவர பல பேர் குரல் கொடுத்தாலும் கூட, இது பாதுகாப்பானது அல்ல. கருச்சிதைவிற்கு பின் ஒரு பெண் சந்திக்கும் உடல்ரீதியான மற்றும் மனரீதியான பிரச்சனைகள் பல இருக்கின்றன. பெண்கள் இந்த கருச்சிதைவினால் பெரிய மற்றும் சிறிய பிரச்சனைகளால் பாதிப்படைகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வாந்தி, காய்ச்சல், இரத்தப்போக்கு, வயிற்று வலி போன்ற சிறிய பிரச்சனைகளையும் இரத்த சோகை, எண்டோடாக்சிக் அதிர்ச்சி, வலிப்பு, கர்ப்பப்பை வாய் சேதம் போன்ற பெரிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். எனினும், சிலருக்கு மெல்லிய இரத்த போக்கு மற்றும் லேசானா வலியோடு நின்று விடும். இருப்பினும் கீழே சொல்லப்பட்ட இந்த அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்:
*
கெட்ட
வாடையுடன்
பெண்ணுறுப்பில்
இருந்து
வெளியேறும்
கழிவு
*
காய்ச்சல்
*
அடிவயிற்று
வலி
*
அதிகப்படியான
இரத்தப்போக்கு
தொடர்ச்சியாக
ஏற்படுதல்
*
நீடிக்கும்
வலி
கருச்சிதைவிற்கு பின் வரும் பிரச்சனைகளை கவனமாக கையாளாவிட்டால் அது மரணத்தை கூட ஏற்படுத்தி விடும். கருச்சிதைவினால் அதிக அளவில் மரணங்கள் நிகழ்ந்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது உங்கள் மருத்துவரை அணுகி உதவி பெற்றுக் கொள்ளுங்கள்.
மிகவும் கடினமான காலம்:
* கருச்சிதைவினால் உண்டாகும் மனரீதியான காயத்திலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினமான ஒன்றாகும். நீங்கள் ஒரு தாயாக உங்களை கற்பனை செய்து வைத்திருக்கும் நேரத்தில் நிகழும் இந்த கருச்சிதைவு உங்களுக்கு உணர்ச்சிபூர்வமான மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.
* ஒரு குழந்தையை இழப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. கருச்சிதைவிற்கு பின் நீங்கள் தனிமையாக்கப்பட்டதாக உணர்வு ஏற்பட்டு தனிமை நிலைக்கு தள்ளப்படுவீர்கள். தனியாக இருப்பதை தவிர்த்து, உங்கள் உறவினருடனோ நண்பருடனோ கணவருடனோ இருப்பது நல்லது.
* இதில் இருந்து மீண்டு வருவதற்கு, ஒரு பேப்பரிலோ அல்லது டைரியிலோ உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். இதன் மூலம் கருச்சிதைவினால் ஏற்பட்ட துன்பத்தில் இருந்து சற்று விடுபடலாம்.
முக்கியமான சிகப்பு அபாயம்:
அதிக இரத்த போக்கு என்பது கருச்சிதைவிற்கு பின் ஏற்படும் மிகப் பெரிய பிரச்சனை ஆகும். இப்படி இரத்தப் போக்கு அதிகமாக இருக்கும் காரணத்தினால் உங்கள் சானிடரி துணியை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டிய அவஸ்தைகளும் கூட ஏற்படும். சில பெண்களுக்கு கருச்சிதைவிற்கு பின்னர் இரத்த சோகை ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது.
டி & சி:
கருச்சிதைவு முழுமையாக ஏற்படாவிட்டால் உங்கள் கருப்பறையில் சில திசுக்கள் தங்கிவிடும் ஆபாயம் ஏற்படும். அவ்வாறு நிகழ்ந்தால், கண்டிப்பாக டி & சி செய்ய வேண்டி வரும்.. எனினும், டி & சி செய்வதனால் ஆஷெர்மேன் சிண்ட்ரோம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். பின்னாளில் மீண்டும் உங்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் நிலைமையை இது உண்டாக்கும். கருச்சிதைவிற்கு பின் ஏற்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்றாகும்.
மீண்டும் கருச்சிதைவு:
கருச்சிதைவினால் ஏற்படும் மோசமான பிரச்சனை என்ன தெரியுமா? ஒரு முறை ஏற்பட்டால் தொடர்ச்சியாக பல முறை கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. ஒரு சில பெண்களுக்கு, முதல் கருச்சிதைவை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை கூட கருச்சிதைவு ஏற்படுகிறது.
கவனம் தேவை:
கருச்சிதைவிற்கு பின் ஏதாவது தொற்று ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். கருச்சிதைவிற்கு பின் ஏற்படும் தொற்றுக்கள் அபாயகரமானவை. அப்படி ஏற்படும் வேளையில் உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
ஒழுங்கின்மை:
கருச்சிதைவு உங்களை பெரிதும் கவலைக்கு உள்ளாக்கும். அது உங்கள் கவலைகளை அதிகரிக்கச் செய்யும். ஒரு சில பெண்களுக்கு PTSD எனப்படும் போஸ்ட் ட்ரௌமாடிக் ஸ்ட்ரெஸ் டிசாடர் என்னும் நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இடம்மாறிய கரு:
கருச்சிதைவின் காரணமாக எக்டோபிக் கருவுற்றல் ஏற்படலாம். எக்டோபிக் கருவுற்றல் என்பது கருமுட்டைகள் தவறான இடத்தில் வளருவதாகும். சுருக்கமாக, கருமுட்டைகள் கருமுட்டை குழாயில் வளருவதாகும்.
மலட்டுத்தன்மை:
சில கருச்சிதைவினால் மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், நீங்கள் மறுமுறை கருவுறும் வாய்ப்பை தடுக்கும்.
கருச்சிதைவை கையாளுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இது உங்களை மட்டுமால்லாது உங்கள் கணவர் மற்றும் குடும்பத்தையும் பெரிதும் பாதிக்கும். இதில் இருந்து மீண்டு வருவதற்கு உளவியல்ரீதியான அறிவுரைகளை பெறுவது நல்லது. வரும் முன் காப்பது நல்லது என்பதால் கவனமாக இருப்பது நல்லது.