Just In
- 1 hr ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 1 hr ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 2 hrs ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 3 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Finance வாரம் 2 நாள் லீவு கதையெல்லாம் மலையேறிவிட்டது.. இனி 6 நாள் வேலை.. சாம்சங் அறிவிப்பால் ஷாக்..!!
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Movies Ghilli movie: கில்லி படத்தின் FDFS.. திரையரங்கில் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்த பிரதீப் ரங்கநாதன்!
- Automobiles அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கருச்சிதைவு ஏற்பட்டால் மார்பக புற்றுநோய் வருமா?
தற்போது பெண்கள் அனைவரும் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் மார்ப புற்றுநோய். இத்தகைய மார்பக புற்றுநோயால் நிறைய பெண்கள் பாதிக்கப்படுவதால், அனைத்து பெண்களும் மார்பக புற்றுநோயைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்காகத் தான் இந்த நோயைப் பற்றிய பல விழிப்புணர்வுகள் ஆங்காங்கு நடைபெறுகின்றன.
பொதுவாக மார்பக புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, அதிகப்படியான ஆல்கஹாலை அருந்துதல் மற்றும் கருச்சிதைவு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
எப்படி கருச்சிதைவு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்?
கருச்சிதைவு ஏற்பட்டால், மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஏனெனில் பெண்கள் கர்ப்பமாகும் போது, அவரது உடலில் பெண் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜனின் உற்பத்தி அதிகமாக இருக்கும். அப்படி ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கும் போது, மார்பகத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, அதே சமயம் பால் சுரக்கவும் ஆரம்பிக்கும். அப்படி இருக்கும் போது, கருச்சிதைவு நடைபெற்றால், அது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும். அதுவே இரண்டு மூன்று மாதங்கள் கழித்து கருச்சிதைவு நடைபெற்றால், அது மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பை இன்னும் அதிகரிக்கும்.
அதுமட்டுமல்லாமல், 1997 ஆம் ஆண்டு நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆஃப் மெடிசன், மார்பக புற்றுநோய்க்கும், கருச்சிதைவிற்கு உள்ள தொடர்பினை கண்டறிவதற்கு சர்வே ஒன்றை நடத்தியது. இதில் கருச்சிதைவானது கருத்தரித்த ஆரம்ப காலத்தில் ஏற்பட்டால், மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், அதுவே 2-3 மாதங்கள் கழித்து ஏற்பட்டால், அது மோசமாகும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மார்பக புற்றுநோய் இருப்பதை எப்படி கண்டுப்பிடிப்பது?
மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுப்பிடித்தால், அதனை குணப்படுத்திவிடலாம். அதற்கு அதனை எப்படி கண்டுப்பிடிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் வீட்டிலேயே சோதனையை செய்து எளிமையாக கண்டுப்பிடிக்கலாம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், இது தான்..
* முதலில் தரையில் நேராக படுத்துக் கொண்டு, வலது கையை மேலே தூக்கி, கழுத்தின் பின்புறம் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு இடது கையின் விரல்களால், மார்பகம் மற்றும் மார்பகத்தைச் சுற்றியுள்ள இடத்தை வட்ட சுழற்சியில் மென்மையாக மசாஜ் செய்வது போல் தேய்த்து பார்க்க வேண்டும். இதேப் போன்று இடது பக்கமும் செய்து பார்க்க வேண்டும். அப்போது ஏதேனும் கட்டி போன்று தென்பட்டால், அது மார்பக புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியாகும்.
* அதுமட்டுமல்லாமல், மார்பக காம்புகளில் இருந்து ஏதேனும் நீர்மம் அடிக்கடி வெளிவந்தாலோ அல்லது மார்பக காம்புகளின் நிறம் மாறுபட்டாலோ அல்லது மார்பகத்தின் வடிவம் வித்தியாசமாக இருந்தாலோ, உடனே மருத்துவரை அணுக வேண்டும்.