Just In
- 16 min ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 2 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 2 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 3 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பெண்களுக்கான, கர்ப்ப சோதனைக் கருவியைப் பற்றிய சில தகவல்கள்!!!
இன்றைய நவீன உலகில் கர்ப்பமாக இருப்பதை எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. அதிலும் வீட்டிலேயே கர்ப்பத்தை சோதனை செய்யும் வகையில், அதற்கான கர்ப்ப சோதனைக் கருவியானது (pregnancy strips) மருந்து கடைகளில் கிடைப்பதால், பெண்கள் கர்ப்பமாக இருப்பதை தற்காலிகமாக உறுதி செய்து கொண்டு, பின் மருத்துவரிடம் சென்று முறையான பரிசோதனையை மேற்கொண்டு, வீட்டில் உள்ளோரிடம் சந்தோஷமாக சொல்கின்றனர்.
சோதனை கருவி என்றதும் கஷ்டமான சோதனையாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது மிகவும் எளிதானது. மேலும் பெண்கள் பலருக்கு இது பற்றி சரியாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே அத்தகையவர்களுக்கா அந்த சோதனைக் கருவியைப் பற்றிய சில தகவல்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கர்ப்ப சோதனை கருவியை எப்படி பயன்படுத்துவது?
கர்ப்ப சோதனைக் கருவியானது அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும். இந்த கருவி சிறுநீரில் எவ்வளவு எச்.சி.ஜி உள்ளது என்பதை கொண்டு கர்ப்பமாக உள்ளோமா, இல்லையா என்பதை சொல்லும். பொதுவாக திருமணமான பின் மாதவிடாய் தவறும் போது, சிறுநீரில் எச்.சி.ஜி-யானது அதிகரிக்கும். எனவே மாதவிடாய் தவறினால், அப்போது இநத் கருவியைக் கொண்டு சோதனையை மேற்கொள்ளலாம்.
அதிலும் இந்த சோதனையை காலையில் எழுந்ததும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் தான், சரியான எச்.சி.ஜி-யின் அளவானது சரியாக காண்பிக்கப்படும். மேலும் இநத் சோதனை மேற்கொள்ளும் முன், தண்ணீர் குடிக்கவே கூடாது. இல்லையெனில் அவை எச்.சி.ஜி-யின் அளவில் இடையூறை ஏற்படுத்தி, தவறான முடிவை காட்டும். வேண்டுமெனில் இந்த சோதனையை மாதவிடாய் தவறிய முதல் நாளே மேற்கொள்ளலாம். தீர்வானது சரியாக தெரிய வேண்டுமெனில், அந்த கருவியில் கொடுத்துள்ளபடி பின்பற்ற வேண்டும்.
சோதனையின் முடிவு தெரிய எவ்வளவு நேரம் ஆகும்?
இந்த சோதனையின் முடிவானது, 5 நிமிடங்களிலேயே தெரிந்துவிடும். அதிலும் சில கருவிகள், சிவப்பு, பிங்க் அல்லது ப்ளூ போன்ற நிறங்களில் தீர்வை சொல்லும். மேலும் சில கருவிகள் 'கர்ப்பம்' அல்லது 'கர்ப்பமில்லை' என்று காட்டும்.
இந்த சோதனைக் கருவி சரியான தீர்வைக் கொடுக்குமா?
நிச்சயம், இந்த கேள்வியை அனைத்து பெண்களும் கேட்பார்கள். உண்மையில், இந்த கருவியில் கொடுத்துள்ள படி பின்பற்றினால், சரியான தீர்வு கிடைக்கும். அதிலும் 97% சரியான பதிலையே கொடுக்கும். அதுவும் சூழ்நிலையைப் பொறுத்தது. உதாரணமாக, மாதவிடாய் சுழற்சிக்கான நாள் வருவதற்கு முன்பே, இந்த சோதனையை மேற்கொண்டால், சரியான தீர்வு கிடைக்காது. ஒருவேளை கருவியானது எதிர்மறையான முடிவைக் கொடுத்தால், அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அவை கர்ப்பமாக இல்லை அல்லது உடலில் போதிய எச்.சி.ஜி இல்லை என்பது தான்.
மேலும் முறையற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தாலோ அல்லது தற்போது தான் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதை நிறுத்தியிருந்தாலோ, சரியான சோதனை முடிவைப் பெறுவது கடினம். இந்த மாதிரியான சூழ்நிலையில் 3-4 நாட்கள் கழித்து சோதனையை மேற்கொள்ள வேண்டும். அதிலும் சில பாதிப்படைந்த கருவிகளை பயன்படுத்தினால், தவறான தீர்வே கிடைக்கும். எனவே கர்ப்பத்திற்கான அறிகுறிகள் இருந்து, இந்த சோதனையை மேற்கொண்டும் சரியான பதில் கிடைக்காவிட்டால், மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.