Just In
- 18 min ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 5 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 6 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 6 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குழந்தைகளுக்கு இதய நோய்கள் வருவது எதனால்?
மிகச் சிறிய வயதிலேயே குழந்தைகளுக்கு இதய நோய்களால் பாதிக்கப்படுவதுண்டு. ஏன் இந்த பருவத்திலேயே நோய்கள் இதய நோய்கள் வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஏன் இதய நோய்கள் வருகிறது?
உலகளவில் 100 ல் ஒரு குழந்தைக்கு இதய நோய் உள்ளது. இதற்கான காரணம் எதுவென ஆராய்ச்சி செய்ததில், ஆக்ஸிஜன் குறைபாடே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
கரு வளர்ச்சியின்போது ஆக்ஸிஜன் போதிய அளவு கிடைக்காததால், செல் உளைச்சலுக்கு ஆளாகிறது. இந்த அழுத்ததை தவிர்க்க புரொட்டின் உற்பத்தியை தடுக்கிறது.
புரொட்டின் சரியான அளவு கிடைக்காவிட்டால் கரு சரியாக வளர்ச்சியடையாது. கருவில் முதலில் இதயம் தோன்றுவதால் அதன் வளர்ச்சியில் குறைகள் ஏற்படுகிறது. விளைவு இதய நோய். பிறப்பில் உண்டாகும் குறைபாடே இதய நோய்களுக்கு காரணம்.
ஆக்ஸிஜன் குறைப்பாட்டிற்கு காரணம் என்ன?
கருமுட்டைக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காததற்கு காரணம், தாய்க்கு உயர் ரத்த அழுத்தம், நிறைய மருந்துகள் உட்கொள்வது என நிறைய காரணங்களை சொல்லலாம் என்று ஜர்னல் டெவலப்மென்ட் என்ற மருத்துவ இதழ் கூறியுள்ளது.
ஆக்சிஜன் குறைப்பாடு தவிர்த்து, அதிகப்படியான வெப்ப நிலை, ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, மிகக் குறைவான ஊட்டச்சத்து, நச்சுக்கள் உடலில் உண்டாவது ஆகியவை செல் வளர்ச்சிகளை பாதிக்கலாம். இவற்றால் இதயம் மட்டுமல்லாது சிறு நீரக பாதிப்பும் உண்டாகிறது என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த ஆய்விற்காக, எலியின் கருமுட்டையில் ஆக்ஸிஜன் அளவை குறைத்தனர். 21 சதவீதத்திலிருந்து வெறும் 5.5. சதவீதத்திற்கு ஆக்ஸிஜன் அளவை குறைத்தனர். 8 மணி நேரத்திற்கு பின், கருவில் உருவான இதயம் பாதிப்படைந்தது தெரிய வந்தது. மனிதர்களுக்கும் இது போன்றே பல்வேறு இதய நோய்களுக்கு காரணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.