Just In
- 1 hr ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 3 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
குழந்தைகளின் ஹைபர் ஆக்டிவ் மற்றும் கவனக் குறைபாட்டிற்கு காரணம் எது தெரியுமா?
சில குழந்தைகள் ஹைபர் ஆக்டிவாக ஒரு இடத்தில் ஒரு நொடி கூட இல்லாமல் தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். தூக்கமும் அவர்களை பாதிக்கும். அதேபோல், சில குழந்தைகள் கவனக் குறைப்பாட்டோடு இருப்பார்கள். ஒரு தடவைக்கு பல தடவை சொன்னால்தான் கவனிப்பார்கள்.
இது மூளை சம்பந்தப்பட்ட கோளாறாகும். இது பிரசவத்தின் போது தாய் சிக்கல்கள் சந்திக்க நேர்ந்தாலோ அல்லது ஊட்டச் சத்து குறைப்பாட்டினாலோ வரும் என முந்தைய ஆராய்ச்சியில் கூறி வந்தனர். ஆனால் அதற்கான காரணங்கள் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
லண்டனிலுள்ள கிங்க்ஸ் காலேஜில் இந்த மாதிரியான பாதிப்புகள் எப்படி உருவாகின்றன என ஆராய்ச்சியை சமீபமாக மேற்கொண்டனர்.
இதில் இவ்வாறு அசாதரண நடவடிக்கைகள் கொண்ட 81 குழந்தைகளிடம் ஆய்வை நடத்தியபோது, கர்ப்ப காலத்தில் தாய் சாப்பிட்ட அதிகப்படியான இனிப்பு வகை உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளே காரணம் என தெரிய வந்துள்ளது.
அதேபோல் அவசர கதியில் துரித உணவுகள் சாப்பிடுவதாலும் , அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு ஹைபர் ஆக்டிவ் மற்றும் கவனக் குறைப்பாடு வர வாய்ப்புள்ளது என தெரிய வந்துள்ளது.
குழந்தைகளுக்கு உருவாகும் IGF2 என்ற ஜீன்தான் கரு வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் காரணமான மரபணு. கர்ப்பிணிகள் அதிக இனிப்பு கலந்த உணவுகளையும், அதிக கொழுப்பு உணவுகளையும் சாப்பிடும்போது, அது IGF2 ஜீனை அதிகமாக தூண்டுகின்றன.
இதனால்தான் பிறக்கும் குழந்தைகள் அதிக துறுதுறுப்புடன் இருக்கின்றன என தலைமை ஆராய்ச்சியாளர் எட்வார்டு கூறியிருக்கிறார். அதனால் கர்ப்பம் அடைந்தவர்கள் நல்ல சமச்சீர் உணவுகளை சாப்பிட்டு கொழுப்பு மற்றும் இனிப்பு உணவுகளை குறைத்தால் அவர்களுக்கு நல்ல அறிவுடன் கூடிய குழந்தைகள் பிற்க்கும் என மேலும் அவர் கூறுகிறார்.