Just In
- 33 min ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 2 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
Don't Miss
- Movies இமான் வருவதற்குள்.. இன்னைக்கும் சிவகார்த்திகேயனை விடாமல் விரட்டிய ப்ளூ சட்டை மாறன்!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்க செல்ல குழந்தைக்கு காது குத்தப் போறீங்களா? இதெல்லாம் ஞாபகம் வெச்சுக்கோங்க...
உங்கள் குழந்தைக்கு காது குத்தலாம் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒருசில விஷயங்களை பெற்றோர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு காது குத்தும் போது, அவர்களுக்கு நிறைய நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் நிபுணர்கள் பலர், குழந்தைகளுக்கு காது குத்தினால், அவர்களின் ஆரோக்கியத்திற்கு பிரச்சனை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்நேரத்தில் காய்ச்சல் தான் ஏற்படும். ஆகவே பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், குழந்தைக்கு காது குத்துவதாக முடிவெடுத்திருந்தால், அவர்கள் பிறந்து ஆறு மாதம் கழித்து தான் காது குத்த வேண்டும். இதுப்போன்று பல உள்ளன. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, குழந்தைகளின் நலனுக்காக, குழந்தைக்கு காது குத்துவதாக இருந்தால், பெற்றோர்கள் என்னவெல்லாம் மனதில் கொள்ள வேண்டும் என்று ஒருசிலவற்றைப் பட்டியலிட்டுள்ளது.
அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதன் படி நடந்தால் உங்கள் குழந்தைக்கு ஏற்படும் அதிகப்படியான வலியைக் குறைக்கலாம்.
* குழந்தைக்கு காது குத்தலாம் என்று முடிவெடுக்கும் முன், குழந்தைக்கு போட வேண்டிய அனைத்து தடுப்பூசிகளும் முடிந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும். இப்படி அனைத்து தடுப்பூசிகளும் முடிந்த பின், காது குத்தினால், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் காய்ச்சல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
* குழந்தைக்கு காது குத்தும் முன் அவர்களுக்கு சிறிது வலி நிவாரணியைக் கொடுத்தால், அவர்களுக்கு அதிகப்படியான வலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.
* குறிப்பாக பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டியது என்னவென்றால், குழந்தைக்கு காது குத்தி முடித்தப் பின்னர், அந்த இடத்தில் சிறிது ஹைட்ரஜன் பெராக்ஸைடு அல்லது ஆல்கஹாலை பஞ்சில் நனைத்து வைக்கும் போது சிறிது எரிச்சலாக இருந்தாலும், நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கும்.
* உங்கள் செல்ல குழந்தைக்கு காது குத்தியப் பின்னர், ஒரு நாளைக்கு இரண்டு முறை கம்மலை சுற்றி விட வேண்டும். இதுவும் இந்த செயலை குறைந்தது ஆறு மாதத்திற்கு செய்ய வேண்டும்.
* முக்கியமாக குழந்தைக்கு காது குத்தியப் பின்பு, அவர்களது காதுகளில் உள்ள கம்மலை ஒரு வருடத்திற்கு கழற்றக்கூடாது. மேலும் தினமும் சிறிது தேங்காய் எண்ணெய் வைத்து வர வேண்டும்.