Just In
- 7 min ago உங்க எடை திடீரென குறையுதா? ரொம்ப சந்தோஷப்படாதீங்க... உங்களுக்கு இந்த ஆபத்தான நோய்கள் இருக்க வாய்ப்பிருக்காம்!
- 1 hr ago பிரியாணி இலையில் இவ்வளவு நன்மைகள் ஒளிஞ்சிருக்கா? இனிமே டெய்லி உணவில் எப்படியாவது சேர்த்துக்கோங்க...!
- 2 hrs ago மோனாலிசா ஓவியத்தில் இருக்கும் பெண் மோனாலிசாவே இல்லையாம்...ஆறு குழந்தைக்கு தாயான இந்த பெண்ணின் பெயர் இதுதானாம்!
- 5 hrs ago இந்திய வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றங்களை செய்த கொடூர அரசர்கள்... இவர்கள் அரசர்கள் இல்லை அரக்கர்கள்...!
Don't Miss
- News உங்கள் தொகுதியில் யார் போட்டி? 40 தொகுதிக்கான நாம் தமிழர் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் சீமான்
- Sports அந்த முடிவு தவறாகிவிட்டது.. இஷாந்த் சர்மாவின் காயமும் முக்கிய காரணம்.. தோல்வி குறித்து ரிஷப் பண்ட்!
- Movies லோகேஷ் கனகராஜை லவ் பண்ணாத ஆளு யாரு இருக்கா?.. நெருக்கமாக நடித்தது குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்!
- Automobiles இப்படியொரு புள்ளையை பெத்ததுக்காக ரொம்ப பெருமைப்பட்டு இருப்பாரு!! இவ்வளவு காஸ்ட்லீயான வாகனம் பரிசா!
- Finance மாருதி சுசூகி என்ன இப்படி இறங்கிட்டாங்க.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!
- Travel சென்னைக்கு பக்கத்தில ரோப் காருடன் செல்லக்கூடிய வசதி – அழகான யோக நரசிம்மர் கோயில்!
- Technology 5352 நகரங்கள்.. அம்புட்டு பேருக்கும் 1000GB.. கிள்ளி கொடுக்குற பழக்கமே அம்பானி கிட்ட இல்ல.. அள்ளி தர்றாரு!
- Education டிஎன்பிஎஸ்சி குரூப்-1 நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சி
குழந்தைகளுக்கு சளி, காய்ச்சலா வெற்றிலை சாறு கொடுங்க !
மூச்சுதிணறல் குணமாகும்
குழந்தைகளுக்கு சளி அதிகமானால் இருமலும் மூச்சுத் திணறலும் ஏற்படும் அவர்களுக்கு வெற்றிலை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. வெற்றிலையை லேசாக மெழுகுவர்த்தி நெருப்பில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
நுரையீரல் நோய்கள்
குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல், ஜன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மசித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் இருந்தால் வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படும். வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.
மலச்சிக்கல் நோய் குணமாக
சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.
கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.
கட்டிகள் குணமாகும்
வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும். தலையில் தண்ணீர் கோர்த்து மூக்கில் விடாது ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும். வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். இதை இரவில் செய்தால் நல்லது.சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுகத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.
குரல் வளம் கிடைக்கும்
வெற்றிலைச்
சாறு
சிறுநீரைப்
பெருக்குவதற்கும்
பயன்படுகிறது.
வெற்றிலைச்சாற்றுடம்
நீர்
கலந்த
பாலையும்,
தேவையான
அளவு
கலந்து
பருகி
வர
சிறு
நீர்
நன்கு
பிரியும்.
வெற்றிலையின்
வேரை
சிறுதளவு
எடுத்து
வாயிலிட்டு
மென்று
வர
குரல்
வளம்
உண்டாகும்.
எனவே
இசைக்கலைஞர்கள்
இதனை
அதிகம்
பயன்படுத்துகிறார்கள்.