Just In
- 2 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 4 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 4 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 5 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ராமரின் மரணத்திற்கு பிறகு அயோத்தியை ஆண்டவர்கள் யார் என்று தெரியுமா?
ராமரின் மரணத்திற்கு பிறகு அயோத்தியை ஆண்டவர்கள் யார் என்று தெரியுமா?
Recommended Video
நமது சிறுவயதில் இருந்தே நாம் அதிகம் கேட்ட, பார்த்த கதைகளில் ஒன்று இராமாயணம். இந்தியாவின் இரு காவியங்களில் மகாபாரதத்துடன் மற்றொரு இடத்தைப் பகிர்ந்துக் கொண்டிருப்பதும் இராமாயணமே. இந்து மத கடவுளான மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக இராமயணத்தில் இடம்பெற்றுள்ளார் ராமர்.
நல்ல மகன், சிறந்த அண்ணன், அக்கறையான கணவன் மற்றும் மிக முக்கியமாக குறிப்பிடத்தக்க மற்றும் பாராட்டுதலுக்குரிய அரசன் என்று ஒரு மனிதன் எப்படியாக இருக்க வேண்டும் என்று வடிக்கப்பட்ட கதாபாத்திரமாக உருவம் பெற்றிருக்கும் ராமரது குணாதிசயங்கள்.
இவர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்று மீண்டும் வந்து அயோத்தியின் மன்னராக பதிவேற்றார். இந்த வருகையை தான் வடமாநிலத்தவர்கள் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். இராமர் சீதையை மணமுடித்தது, வனவாசம் சென்றது, ராவணனுடன் போரிட்டது என்று பல தகவல்கள் நாம் அறிவோம்.
ஆனால், ராமர் இறப்புக்கு பிறகு அயோத்தி என்ன ஆனது, அந்த நாட்டை ஆண்டது யார் என்று உங்களுக்கு தெயரியுமா?
லவ, குசா
ஸ்ரீ ராமருக்கும், சீதா தேவிக்கும் பிறந்தவர்கள் மகன்கள் தான் இரட்டையர்களான லவ மற்றும் குசா. ராமரின் மறைவுக்கு பிறகு, ஸ்ரீ ராமரின் மூத்த மகனான குசா மன்னர் பதவி ஏற்றார் என்று நம்பப்படுகிறது. ஆனால், தசரதன் மாதிரியோ, ராமர் மாதிரியோ குசா ஒரு சிறந்த மன்னராக திகழவில்லை.
நாகர்கள்!
ஸ்ரீ ராமர் குசாவிற்கு பரிசாக கொடுத்த விலைமதிப்பற்ற கற்களை நாகர்கள் திருடி சென்ற காரணத்தால், குசா அவர்களை கொலை செய்ய முயற்சித்தார். அந்த கற்கள் ஸ்ரீ ராமருக்கு அகஸ்தியர் முனிவர் கொடுத்தாகும்.
மரணம்!
தனது மதாதையர்கள் போல குசா சிறந்த வீரனாகவும் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், துர்ஜயா எனும் அரக்கனுடன் போரிடும் போது குசா இறந்தார். துர்ஜயா சொர்க்கத்தில் சண்டை இட்டு தாக்குதல் நடத்தியவன் என்றும், இந்திரபுரியில் சண்டையிட்ட போது மரணமுற்றான் என்றும் அறியப்படுகிறது.
அடுத்தது யார்?
குசாவின் மரணத்திற்கு பிறகு, குசா மற்றும் கும்தவதி என்பவருக்கும் பிறந்த அதிதி மன்னராக பதிவு ஏற்றுள்ளார். அதிதி தனது முன்னோர்கள் போல சிறந்த மன்னராகவும், தலைசிறந்த போர் வீரனாகவும் திகழ்ந்துள்ளார். அதிதி வசிஸ்டர் முனிவரின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் படி வாழ்ந்ததாக அறியப்படுகிறது.
நிஷதா
அதிதியின் மரணத்திற்கு பிறகு அவரது மகன் நிஷதா மன்னர் பதவி வகித்தார். தனது தந்தை அதிதியை போலவே நிஷத்தும் சிறந்த போர் வீரராக திகழ்ந்தார். இவருக்கு பிறகு நலா எனும் மிகச்சிறந்த போர்வீரன் மன்னர் பதவி வகித்தார். இவர் முனிவர்களுடன் காடுகளில் சென்று வாழ திட்டமிட்டு, தனது மகன் நபாவை அரசராக்கி செல்கிறார். நபா கோசல தேசத்தை ஆண்டு வந்தார். இவரை எதிர்த்து புந்தரிகா போரிட்டார்.
புந்தரிகா!
இதன் பிறகு புந்தரிகாவின் மகன் க்ஷீமா எனும் போர் வீரன் பதிவியேற்றான். இவர் தேவா எனும் படைக்கு தலைவனாக இருந்த காரனத்தால் தேவநீகன் என்றும் அழைக்கப்பட்டார். இவரது மகன் அகிநாகு என்பவர் உலகியே ஆண்டதாகவும் புகழ் பாடப்பட்டுள்ளது. இவரை எதிரிகளும் கூட விரும்பினார்கள் என்றும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ப்ரியாத்ரா!
அகிநாகுவுக்கு பிறகு அவரது மகன் ப்ரியாத்ரா மன்னர் பதவி ஏற்றார். பிறகு இவரது மகன் சில் அரசரானார் இவர் மிகவும் அமைதியானவர், பொறுமையானவர் என்று கூறப்பட்டுள்ளது. இவரது ஆட்சி காலத்திக்கு பிறகு நபி எனும் இவரது மகன் அரசராகியுள்ளார்.
பின் அரசரானவர்கள்...
பிறகு நபியின் மகன் வஜ்ரானபா. வஜ்ரானபாவின் மகன் சங்கத். சங்கத்திற்கு பிறகு ஹரிதஷ்வா. இவர்களை பின்தொடர்ந்து விஷ்வா சஹா, ஹிரண்ய நபா , கௌசல்யா, பிரமிஷ்தா, புத்ரா, புஷ்யா, துர்வ சந்திசுதர்ஷனா மற்றும் அக்னி வர்ணா போன்றவர்கள் அரசராக திகழ்ந்துள்ளனர்.
இவர்களுடன் ரகுவம்சம் முடிவுற்றதாக அறியப்படுகிறது.