Just In
- 15 min ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 52 min ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 1 hr ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 5 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
Don't Miss
- News எனக்கே ஸ்கெட்சா? தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தகராறு..தூக்கியடிக்கப்படும் தலைகள்! இவர் தான் காரணமா?
- Movies தளபதி 69 படத்தை இயக்குகிறேனா?.. வெற்றிமாறனே சொன்ன பதிலை பாருங்க.. வந்தது முற்றுப்புள்ளி
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கடவுளைத் தொழும் போது, தவறாமல் பின்பற்ற வேண்டிய 7 விஷயங்கள்!
இங்கு கடவுளை வணங்கி மந்திரங்களைச் சொல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
கடவுளை வணங்கும் போது, மந்திரங்களைச் சொல்வது வழக்கமான ஒன்று. ஆனால் அப்படி மந்திரங்களை சொல்லும் போது, நாம் ஒரு குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றினால், அந்த மந்திரத்தின் முழு பலனையும் பெற முடியும். பொதுவாக மந்திரத்தை சொல்லும் போது, நம்மைச் சுற்றி ஒரு நேர்மறை ஆற்றல் உற்பத்தியாகும்.
ஆனால் நாம் மந்திரங்களைச் சொல்லி துதிக்கும் போது, ஏனோ தானோவென்று சொன்னால், மந்திரம் சொல்லி எந்த பலனுமே கிடைக்காது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, கடவுளை வணங்கி மந்திரங்களைச் சொல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து இனிமேல் பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.
விதிமுறை #1
மந்திரங்களை மாலை மற்றும் இரவு நேரங்களில் சொல்வதைத் தவிர்த்திடுங்கள். மந்திரங்களை சொல்வதற்கு சிறந்த நேரம் பகல் வேளை தான். அதிலும் பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4-5 அல்லது சூரியன் உதிப்பதற்கு முன் சொல்வது இன்னும் நல்லது. ஒருவேளை உங்களுக்கு இந்த நேரங்கள் ஒத்து வராவிட்டால், இரவில் படுக்கும் முன் மந்திரங்களை சொல்லி பின் உறங்கலாம்.
விதிமுறை #2
காலையில் மந்திரங்களைச் சொல்லும் போது கிழக்கு திசையை நோக்கி சொல்ல வேண்டும். அதுவே இரவில் என்றால் வடக்கு திசையை நோக்கி சொல்ல வேண்டும்.
விதிமுறை #3
மந்திரங்களை கண்ட நிலையில் இருந்தவாறு சொல்லக்கூடாது. சரியான நிலை அல்லது ஆசன நிலையில் அமர்ந்து சொல்ல வேண்டும். அதிலும் பத்மாசன நிலையில் அமர்ந்து சொல்வது இன்னும் நல்லது.
விதிமுறை #4
மந்திரங்களை அமைதியான இடத்தில் அமர்ந்து சொல்ல வேண்டும். மந்திரங்களை சொல்ல ஆரம்பித்த பின், இடத்தை மாற்றக்கூடாது. ஏனெனில் மந்திரம் சொல்ல ஆரம்பித்த இடம் ஆற்றல் நிறைந்த இடமாக மாறியிருக்கும். இடத்தை மாற்றினால், மந்திரத்தின் பலனை பெற முடியாது.
விதிமுறை #5
தினமும் மந்திரங்களை ஒரே நேரத்தில் தான் சொல்ல வேண்டும்.
விதிமுறை #6
மந்திரங்களை சொல்லும் போது, துளசி, ருத்ராட்சை அல்லது சந்தன மணிகளைப் பயன்படுத்தி சொல்வது நல்லது. அதிலும் 108 முறை மந்திரம் சொல்லும் போது, இவற்றைப் பயன்படுத்துவது இன்னும் சிறந்தது.
விதிமுறை #7
மந்திரங்களைச் சொல்ல பயன்படுத்தும் ருத்ராட்சம் போன்ற மாலைகளை, மற்றவர்கள் பார்க்கும் படி வைத்து சொல்வதைத் தவிர்த்திடுங்கள். மாறாக ஏதேனும் ஒரு பையினுள் வைத்து சொல்லுங்கள்.