Just In
- 59 min ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 10 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Don't Miss
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அரிய வகை நோயில் இருந்து முற்றிலும் குணமடைந்த மர மனிதனின் சுவாரஸ்ய கதை!
இங்கு அரிய வகை நோயில் இருந்து முற்றிலும் குணமடைந்த மர மனிதனின் கதை குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
உலகில் பல அரிய வகை நோய்கள் உள்ளன. அதில் ஒன்று தான் 'எபிடெர்மோடிஸ்ப்ளாசியா வெருசிஃபோர்மிஸ்'. வங்காளத்தில் உள்ள ஒருவர் இந்த அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு, மர மனிதன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
இதுவரை இந்த நோய் குணப்படுத்த முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போதைய நமது தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் முன்னேற்றத்தால், இந்த மனிதருக்கு உள்ள நோய் முற்றிலும் குணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மர மனிதரின் பெயர் அபுல் பஜந்தர். இந்த நிலையால் இவர் சாதாரண மனிதனின் வாழ்க்கையை வாழ முடியாமல் தவிர்த்து வந்தார். தற்போது இந்நோய் குணமாகியிருப்பது, உண்மையிலேயே சந்தோஷத்தை அளிக்கிறது. இந்த மர மனிதனின் சுவாரஸ்ய கதையைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
அரிய மரபணு நிலை
'எபிடெர்மோடிஸ்ப்ளாசியா வெருசிஃபோர்மிஸ்' என்பது மிகவும் அரிய மரபணு நிலையாகும். இந்நிலையினால், மனித உடலில் மரக்கட்டைகளைப் போன்று பெரிய பெரிய மருக்கள் உருவாகியிருக்கும். துரதிர்ஷ்டவசமாக, அபுல் பஜந்தர் இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுவிட்டார்.
வங்காள அரசின் இலவச சிகிச்சை
இவரது இந்த அரிய நிலை மிகவும் பிரபலமாகியப் பின், வங்காள அரசாங்கத்தால், இவருக்கு இலவச சிகிச்சை வழங்கப்பட்டது. இவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையால், இவரும், இவரது மனைவி மற்றும் குழந்தையும் பல வருடங்களாக மருத்துவமனையிலேயே தங்கியிருந்தனர்.
16 அறுவை சிகிச்சைகள்
இந்த நிலையில் இருந்து சரி செய்வதற்கு அபுல் பஜந்தருக்கு 16 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இவரது குழந்தையை தற்போது அவரால் தூக்கி கொஞ்ச முடிகிறது.
இரு வேறு சிறு அறுவை சிகிச்சைகள்
இதுப்போன்று ஒரு அரிய நோய்க்கு சிகிச்சை அளித்து முழுமையான குணமாகியிருப்பது, அறிவியல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத மைல் கல்லாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் அபுல் முற்றிலும் குணமாவதற்கு இன்னும் இரண்டு அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சாதாரண வாழ்க்கையை வாழ ஆசைப்படும் அபுல்
இவரது கதை உலகம் முழுவதும் வைரல் ஆன பின்பு, உலகின் பல பகுதிகளில் இருந்தும் இவர் நன்கொடைகளைப் பெற்றார். இந்த நன்கொடைகளை வைத்து, ஒரு சிறு தொழில் ஆரம்பிக்க போவதாக திட்டம் தீட்டியுள்ளார்.
இவரது வாழ்க்கை சிறப்பாக அமைய நாமும் இவரை வாழ்த்துவோம்.