Just In
- 14 min ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 2 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 2 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 3 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எமனின் உயிரைப் பறித்து, மீண்டும் உயிர் கொடுத்த சிவபெருமான்!
இங்கு எமனை வென்று, 'என்றும் 16' என்னும் வரத்தைப் பெற்ற புகழ் பெற்ற மார்கண்டேயரின் வரலாறு குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
புராணங்களின் படி, எல்லா சமயங்களிலும் மிகவும் சக்தி வாய்ந்த முனிவராக இருப்பவர் தான் மார்கண்டேயர். இவர் தீவிர சிவ பக்தரான மிருகண்டுவின் மகனாவார். இவர் தன்னைப் பிடிக்க வந்த எமனை வென்று, சிவனிடமிருந்து ஓர் அற்புத வரத்தைப் பெற்றவர்.
இந்த மார்கண்டேயரின் வரலாறு மிகவும் பிரபலமானது. உங்களுக்கு மார்கண்டேயரின் கதை தெரியாதென்றால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மிருகண்டு முனிவர்
மிருகண்டு முனிவருக்கு குழந்தைகளே இல்லை. இவர் தன் மனைவியுடன் சேர்ந்து குழந்தை வரம் வேண்டி, சிவனை நோக்கி தவம் புரிந்தனர். மிருகண்டு மற்றும் அவரின் மனைவி செய்த தவத்தால் மனம் குளிர்ந்த சிவன், அவர்கள் முன்பு தோன்றினார்.
எந்த மாதிரி குழந்தை வேண்டும்?
மிருகண்டுவின் முன் தோன்றிய சிவன், அவர்களிடம் உங்களுக்கு 100 வயது வரை வாழும் முட்டாள் குழந்தை வேண்டுமா அல்லது 16 வயது வரை வாழும் புத்திசாலியான குழந்தை வேண்டுமா என்று கேட்டார். அந்த தம்பதியினர் 16 வயது வாழும் புத்திசாலியான குழந்தை வேண்டும் என்று வேண்டினர். சிவனும் அதற்கு அருள் புரிந்தார்.
மார்கண்டேயர்
அப்படி மிருகண்டு முனிவர் தவமிருந்து பெற்ற குழந்தை தான் மார்கண்டேயர். இந்த மார்கண்டேயரை மிருகண்டு முனிவர் தன்னைப் போலவே தீவிர சிவ பக்தராக வளர்த்தார். தந்தையின் ஆலோசனையின் படி திருகடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்தகடேஸ்வரரை தினமும் கங்கை நீரைக் கொண்டு வழிபட்டு வந்தார்.
எமனின் வருகை
ஒருநாள் எமதர்ம ராஜா 16 வயதை எட்டிய மார்கண்டேயரை அழைத்துச் செல்ல பூலோகம் வந்தார். அதைக் கண்ட மார்கண்டேயர் எமனைக் கண்டு அஞ்சி ஓடி, சிவலிங்கத்தை கட்டி அணைத்து தஞ்சம் அடைந்தார். சிவபெருமான் தனது பாதுகாப்பில் உள்ள மார்கண்டேயனைத் தொடாதே என்று எமனை எச்சரித்தார்.
சிவனின் கோபம்
இருப்பினும் எமன் சற்று கேட்காமல், தன் கையில் உள்ள பாசக் கயிற்றை மார்கண்டேயன் மீது வீசினார். அப்படி வீசிய பாசக்கயிறு மார்கண்டேயனுடன் லிங்கத்துடனும் சேர்த்து விழ, உடனே சிவபெருமான் கோபம் கொண்டு தன் இடது காலால் எமனை உதைத்து, தனது இடது காலுக்கு கீழ் படுக்க வைத்து, எமனை செயலற்று போக செய்தார்.
சிவனின் கோபம் தணியும் வரை, பூமியில் எந்த உயிரும் இறக்காமல் இருந்தது. பின் பூமி எப்போதும் போன்று செயல்பட வேண்டும் என்று சிவன் கூறி, காலசம்ஹாரமூர்த்தியாய் எழுந்தருளிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், எமனுக்கு உயிர் கொடுத்தார்.
மார்கண்டேயன் பெற்ற வரம்
பின்பு மார்கண்டேயனுக்கு 'என்றும் 16' என்னும் வரத்தை சிவன் வழங்கினார். இதனால் 16 வயதில் இறப்பை சந்திக்கவிருந்த மார்கண்டேயர், வாழ்நாள் முழுவதும் 16 வயதுடனேயே இருந்தார் என்று வரலாறு கூறுகிறது.