Just In
- 4 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 6 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 6 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 7 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சாணக்கியர் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள்!
இங்கு சாணக்கியர் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
சந்திரகுப்த மௌரியரின் முதன்மை அமைச்சராகவும், வழிகாட்டியாகவும் இருந்து, மிகப்பெரிய மௌரிய பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர் தான் சாணக்கியர். இவருக்கு கௌடில்யர், விஷ்ணுகுப்தர் போன்ற பெயர்களும் உண்டு. இவர் பொருளியலின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார்.
இந்திய வரலாற்றிலேயே இவரைப் போன்ற சிறந்த அரசியல் ஆலோசகர் வேறு யாரும் இருக்க முடியாது. பெண்களைப் பற்றிய இவரது சிந்தனை பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். இக்கட்டுரையில் சாணக்கியர் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தகவல் #1
பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர் தான் சாணக்கியர். இவர் பிறக்கும் போது பற்களுடன் பிறந்தவர். துறவி ஒருவர், இவரது வீட்டிற்கு தானம் கேட்டு வரும் போது, சாணக்கியரின் தனித்துவ நிலையை அறிந்து, அந்த துறவி சாணக்கியரின் தந்தையிடம், இக்குழந்தை உலகே வியக்கும் வண்ணம் மன்னராகும் என்று கூறினார். ஆனால் சாணக்கியரின் தந்தையோ, வேறொரு திட்டத்தைக் கொண்டிருந்தார். தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தகவல் #2
ஆசிரியரான சாணக்கியரின் தந்தை, தனது மகனுக்கு இப்படி ஒரு ஆபத்தான வாழ்வு வேண்டாம் என நினைத்து, இருந்த பற்களை உடனே பிடுங்கிவிட்டார். இதைக் கண்ட துறவி, இக்குழந்தை மன்னராகாவிட்டாலும், ஒரு ஆட்சியை நியமிப்பவனாக ஆவான் என்று கூறினார்.
தகவல் #3
சாணக்கியர் தனது படிப்பை பழம்பெரும் தக்ஷஷீலா பல்கலைகழகத்தில் முடித்தார். இந்த இடம் தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளது. அப்போது இந்த பல்கலைகழகம் தான் உலகிலேயே மிகச்சிறந்த பாடசாலையாக இருந்தது.
தகவல் #4
அலெக்சாண்டர் இந்தியாவைப் படையெடுத்து வரும் போது, அப்படையை எதிர்த்துப் போராடி இந்தியாவுடன் இணைத்தவர். அதுவும் தனது 19 வயதிலேயே சந்திரகுப்த மௌரியரின் உதவியுடன் மிகப்பெரிய இந்திய பேரரசை உருவாக்கியவர் சாணக்கியர்.
தகவல் #5
எதிரிகளை வீழ்த்துவதற்கு சிறுமிகளைக் கொண்டு ஒரு படையை சாணக்கியர் உருவாக்கினார். இந்த சிறுமிகளுக்கு சிறு வயதில் இருந்து பூப்பெய்தும் வரை தினமும் சிறிய அளவில் விஷம் கொடுக்கப்பட்டு வந்தது. இதனால் அச்சிறுமிகள் பூப்பெய்தியப் பின் எதிரிகளை அழிக்கும் விஷக்கன்னிகளானார்கள்.
இந்த கன்னிப் பெண்கள் யாருக்கு முத்தம் கொடுத்தாலும், அவர்கள் இறந்துவிடுவர், அந்த அளவில் ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் விஷம் பயங்கர அளவில் இருந்தது. இப்படியும் எதிரிகளை அழிக்க சாணக்கியர் தந்திரமாக செயல்பட்டார்.
தகவல் #6
சாணக்கியரின் படி, ஒரு நல்ல மனைவி காலையில் தாய் போன்று சேவைகளையும், பகலில் சகோதரி போன்று அன்பையும், இரவில் வேசிகளைப் போன்றும் நடந்து கொள்ள வேண்டுமாம்.