Just In
- 46 min ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 10 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Don't Miss
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அர்னாப் கோஸ்வாமி பற்றிய பலரும் அறியாத திகைக்க வைக்கும் 10 உண்மைகள்!
இந்தியாவின் சிறந்த ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் சில...
அர்னாப் கோஸ்வாமி, இப்படி ஒரு ஊடகவியலாளர், இவர் போன்ற வகையில் இவர் தான் முதல் என கூறலாம். இவரது நியூஸ் ஹவர் நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு நிகழ்ச்சியாக அமைந்தது. இதை தொடர்ந்து இது போன்ற நிகழ்சிகளை பல செய்தி ஊடகங்களும் பின்தொடர ஆரம்பித்தன.
மக்கள் மத்தியில் தனது தனி பாணியால் ஒரு பிரபலத்தை போன்ற பெரும் பிம்பம் பெற்ற முதல் செய்தி ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியாக தான் இருக்க முடியும். இவர் மற்றும் அல்ல இவரது குடும்ப பின்னணியும் அரசியல் பிணைப்பு கொண்டுள்ளது.
#1
அர்னாப் கோஸ்வாமி ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர். இவர் 1994-ல் சமூக மானுடவியலில் மாஸ்டர் டிகிரி செயின்ட் ஆண்டனி கல்லூரி, ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பயின்றார்.
#2
இவர் தனது ஊடகவியலாளர் பணியை 1995-ம் ஆண்டு கல்கத்தாவில் "தி டெலிகிராப்" என்ற நாளேட்டில் தொடங்கினார்.
#3
அர்னாப் ஒரு எழுத்தாளரும் கூட. இவர் 2002-ல் "Combating Terrorism: The Legal Challenge." என்ற இவரது முதல் புத்தகத்தை எழுதினார்.
#4
இவரது தந்தைவழி தாத்தா ராஜானி கண்டா கோஸ்வாமி ஒரு வழக்கறிஞர், காங்கிரஸ் தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்.
#5
அர்னாபின் தந்தை மனோராஜன் ஒரு ரிடையர்ட் கர்னல் (Col.Retd). மேலும், இவர் பொது தேர்தலில் பி.ஜே.பி கட்சிக்காக கவுகாத்தியில் போட்டியிட்டும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#6
பிரதமர் நரேந்திர மோடியை அர்னாப் நேர்காணல் கண்ட நிகழ்ச்சி தான் சமூக ஊடகங்களில் பெரிதாய் பிரபலமானதாகும்.
#7
ஸ்ரீ புபேன் ஹசரிகா என்பவர் தான் அர்னாப் கோஸ்வாமியின் ரோல்மாடல். இவர் அசாமை சேர்ந்த பிரபல இசை கலைஞர் ஆவார்.
#8
2012-ம் ஆண்டு இந்தியாவின் பவர்புல் மனிதர்களில் அர்னாப் கோஸ்வாமி 46-வது இடத்தை பிடித்திருந்தார். மேலும், 2015-ம் ஆண்டு பெரும் தாக்கத்தை உண்டாக்கிய நபர் என்ற விருதும் வென்றார்.
#9
2010-ல் இவர் ராம்நாத் கோயங் என்பவரிடம் இருந்து அந்தாண்டின் சிறந்த ஊடகவியலாளர் என்ற விருதும் பெற்றார்.
#10
இவரது ஆக்ரோஷமான பேச்சு, கேள்வி கேட்கும் விதம், எதிரில் அமர்ந்திருப்பவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், தவறை, குற்றத்தை எதிர்த்தால் அதட்டி அமர வைப்பது, அடங்காவிட்டால், ஸ்டுடியோவை விட்டு வெளியேற்றுவது போன்ற சம்பவங்களில் பல முறை ஈடுபட்டுள்ளார் அர்னாப் கோஸ்வாமி. இது தான் இவரை தனித்தன்மை படுத்தி காண்பித்தது.