Just In
- 1 hr ago இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- 4 hrs ago புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- 6 hrs ago உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- 7 hrs ago இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
Don't Miss
- Sports குண்டைத் தூக்கிப் போட்ட பிசிசிஐ.. ஐபிஎல்-இல் டிஆர்எஸ் நீக்கம்.. இனி ரிவ்யூ கேட்டால் இதுதான் நடக்கும்
- Movies AR Murugadoss: 5 வருஷத்துக்கு முன்னாடியே சல்மான்கிட்ட கதையை சொல்லிட்டேன்.. ஏஆர் முருகதாஸ் வெளிப்படை!
- News தமிழகத்தில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்!இதையெல்லாம் செய்ய கூடாது! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
சாபத்தில் இருந்து விடுபட விலங்குகளை திருமணம் செய்து கொண்டவர்கள்!
நிஜ வாழ்க்கையில் மனிதர்கள் விலங்குகளை திருமணம் செய்து கொள்வது என்பது விசித்திரமான ஒன்றாக தான் இருக்கும். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சாபத்தைப் போக்க விலங்குகளை திருமணம் செய்து கொணடனர்.
இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முட்டாள்தனமான பழக்கங்கள் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படி பின்பற்றப்பட்டு வரும் ஓர் பாரம்பரிய பழக்கம் தான் விலங்குகளுடனான திருமணம். புராணங்களில், மனிதர்கள் விலங்குகளை திருமணம் செய்து கொள்வது என்பது பொதுவான ஒன்றாக இருக்கலாம்.
அதில் அனுமனின் தாய் அஞ்சனை ஒரு வாணர ராஜாவை திருமணம் செய்து கொண்டது, ராமாயணத்தில் உள்ள கரடியான ஜாம்பவானின் மகள் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டது மற்றும் உலுப்பி என்னும் பாம்பு அர்ஜூனை திருமணம் செய்து கொள்ள விரும்பியது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஆனால் நிஜ வாழ்க்கையில் மனிதர்கள் விலங்குகளை திருமணம் செய்து கொள்வது என்பது விசித்திரமான ஒன்றாக தான் இருக்கும். அப்படி இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிலர் தங்களுக்குள்ள சாப விமோட்சனத்திற்காக விலங்குகளை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தெரு நாயை திருமணம் செய்த 18 வயது பெண்
ஜார்கண்ட்டில் உள்ள மங்கலி என்னும் 18 வயது பெண்ணிற்கு, ஒரு தெரு நாயுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்த தெரு நாயின் பெயர் ஷெரு ஆகும். இந்த நாயை காரில் மண்டபத்திற்கு அழைத்து வந்தனர், அப்பெண்ணின் உறவினர்கள். இந்த பெண்ணின் திருமணத்திற்கு சுமார் 70 பேர் கலந்து கொண்டதோடு, மேள தாளங்களுடன், இந்த திருமணத்தை கோலாகலமாக நடத்தினர்.
திருமணத்திற்கான காரணம்
இந்த பெண்ணிற்கு இப்படி திருமணம் செய்து வைப்பதற்கு என்ன காரணம் என்று உள்ளூரில் உள்ள குருக்களைக் கேட்டதற்கு, மங்கலி துரதிர்ஷ்ட பெண்ணாக இருப்பதோடு, அது அவளது முழு குடும்பத்தையும், சமூகத்தையும் அழிவிற்குள்ளாக்கும் என பெற்றோர்கள் நினைத்தனர். இதிலிருந்து விடுபட ஒரு ஆணுடன் திருமணம் செய்வதற்கு முன், நாயுடன் திருமணம் செய்து வைத்ததாக கூறினர்.
மங்கலியின் கூற்று
இந்த திருமணத்திற்காக மங்கலி தனது பள்ளி படிப்பை நிறுத்தியதாகவும், நாயுடன் திருமணம் செய்து வைத்தது தனக்கு சந்தோஷத்தை வழங்கவில்லை என்றும், இந்த சடங்கை நிறைய பெண்கள் செய்ததால், தற்போது அவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதாக தனது கிராமத்தில் உள்ளவர்கள் கூறியதால் செய்து கொண்டதாகவும் மங்கலி கூறினாள்.
33 வயது செல்வ குமார்
2007 ஆம் ஆண்டு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய செல்வ குமார் என்பவர் ஒரு பெண் நாயை திருமணம் செய்து கொண்டார். சிறு வயதில் இவர் இரண்டு நாய்கள் உறவில் ஈடுபடும் போது கல்லால் அடித்ததில், இரு நாய்களும் இறந்துவிட்டதால், அந்த நாயின் சாபத்தால், அவருக்கு பக்கவாதம் வந்து கைகளை அசைக்க முடியாமல் போனது. இந்த சாபத்தில் இருந்து விடுபட, ஒரு பெண் நாயை திருமணம் செய்துள்ளாராம்.
9 வயது சிறுமி
9 வயதுடைய சிறுமிக்கு, முதன் முதலில் மேல் தாடையில் பல் முளைத்தது. அதை அச்சிறுமியின் குடும்பத்தினர் துரதிர்ஷ்டமாக கருதி, அதிலிருந்து விடுபட ஒரு நாயுடன் திருமணம் செய்து வைத்தனராம்.
சுடனீஸ் மனிதன்
2006 ஆம் ஆண்டு சுடனீஸ் மனிதன் ஒருவன், ஒரு ஆட்டை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்ததோடு, அந்த ஆட்டின் உரிமையாளருக்கு 75 டாலர் வரதட்சணையாக கொடுத்துள்ளான். பின் அந்த ஆட்டுடன் உடலுறவு கொள்ளவும் முயற்சித்துள்ளான். என்ன ஒரு கேவலம்....