Just In
- 32 min ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 5 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 6 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 6 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினியை பிச்சைகாரன் என எண்ணி பிச்சையிட்ட இளம் பெண் - சுவாரஸ்யமான நிகழ்வு!
ஒருமுறை கோயிலில் ரஜினிகாந்தை கண்ட பெண் பிச்சைக் காரன் என நினைத்து பணம் கொடுத்துள்ளார்...
ரஜினி, இந்தியாவின் பபெரிய சூப்பர்ஸ்டார் நடிகர். தான் யார், தனக்கு என்னென்ன தீயப் பழக்கங்கள் இருந்தன, எப்படி அவற்றில் இருந்து வெளியே வந்தேன் என வெளிப்படையாக பாராட்டும் மனிதர்.
சினிமா துறை என்று மட்டுமில்லாமல், பலதரப்பட்ட மனிதர்களால் எளிமையானவர் என புகழ்ந்து கூறப்படும் நபரான ரஜினியின் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு இது.
இயல்பு!
கேமராவை விட்டு நகர்ந்து விட்டால், ரஜினிகாந்த் என்றுமே ஒரு எளிமையானவர் தான். நடுத்தர வாழ்க்கையில் வாழும் ஒரு நபர் எப்படி உடை உடுத்துவாரோ, பார்க்க எப்படி இருப்பாரோ அப்படி தான் ரஜினியும் இருப்பார்.
கோயில்!
ரஜினி ஒருமுறை வெளி மாநிலத்தில் கோயிலுக்கு சென்ற போது, அவர் இதே போல மிகவும் எளிமையாக தென்பட்டுள்ளார். அவரை கோயில் வெளியே கண்ட ஒரு பெண் ரஜினியை பிச்சைக் காரன் என எண்ணியுள்ளார்.
பிச்சை!
உடனே, தன்னிடம் இருந்த பணத்தை ரஜினிக்கு பிச்சையாக கொடுத்துள்ளார். ரஜினியும் ஒன்றும் கூறாமல் அந்த பணத்தை பெற்றுக் கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டாராம்.
கார் அருகே...
கோயிலை வளாகத்தை விட்டு வெளியேறிய ரஜினி, அவரது காரில் ஏற முற்படும் போது.. மீண்டும் அதே பெண் ரஜினியை கண்டு, தனது தவறை உணர்ந்து ஓடிப்போய் தனது செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுள்ளார்.
கடவுளின் பாடம்.
அதற்கு ரஜினி, இது ஒரு கடவுளின் பாடம். கடவுள் எப்போதுமே எனக்கு என்னுடைய நிலையை குறித்து பாடம் கற்பித்துக் கொண்டே இருப்பார். அப்படி தான் இதுவும். நான் இப்படி தான்... நான் பெரிய சூப்பர்ஸ்டார் எல்லாம் கிடையாது என கூறிவிட்டு நகர்ந்தாராம்.
எளிமை!
பணம், புகழ் நம்மை சூழ்ந்துவிட்டால் தலை, கால் புரியாமல் ஆடுவார்கள். நான் தான் இந்த உலகத்திலேயே உயர்ந்தவன் என்ற எண்ணம் இயல்பாகவே அனைவருக்கும் வரும்.
ஏன் ரஜினிக்கே திரைக்கு வந்த புதிதில் இப்படி ஒரு எண்ணம் இருந்திருக்கலாம். ஆனால், மிக வேகமாக தன்னை எளிமைப்படுத்தி கொண்டது தான் ரஜினியின் சிறப்பு.
பாடல்!
ரஜினியின் முத்து படத்தில் ஒரு பாடல் வரும், "கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன். கழுத்து வரைக்கும் காசு இருந்தால், அது தான் உனக்கு எஜமானன்.." இது வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு செல்லும் போது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய பாடம்.
பணம் என்ற ஒற்றை போதைக்கு அடிமை ஆகிவிட்டால், உலகில் இருக்கும் எல்லா தீய போதைகளும் நம்மை சுற்றிக் கொள்ளும்.
வாழ்க்கை பாடம்.
இந்த நிகழ்வு ஒவ்வொருவரும் தனது வாழ்வில் எளிமை கடைப்பிடிக்கவும் மற்றும் எத்தனை உயரம் சென்றாலும் தலைகனம் கொள்ளாமல் வாழ அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடமாகவும் அமைந்திருக்கிறது.