Just In
- 3 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 4 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 5 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 5 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விதியா? சதியா? அண்ணன் தங்கை திருமணம் செய்து கொண்ட சோகம்!
குழந்தை பேறு சிகிச்சைக்கு சென்ற தம்பதி, மரபணு சோதனையில் அண்ணன், தங்கை என தெரியவர அதிர்ச்சியில் உறைந்தனர்!
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் எங்கிலும் அண்ணன் - தங்கை திருமணம் செய்துக் கொள்ளும் வழக்கம் பெரிதாக இல்லை. இதை யாரும் ஆமோதிப்பதும் இல்லை. ஆனால், விபத்தாக இதுபோன்ற சம்பவம் நமது உலகில் நடந்துள்ளது.
ஆனால், அமெரிக்காவின் மிசிசிப்பி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் தாங்கள் இரட்டையர் என்ற விசயமே தெரியாமல் திருமணம் செய்து, மகபேறு மருத்துவரின் மரபணு பரிசோதனையில் செய்தி கண்டறிந்து அதிர்ச்சியல் உறைந்து போயுள்ளனர் என்ற போலி செய்தி ஒன்று காட்டுத்தீ போல பரவி வருகிறது. அந்த செய்தி பற்றி இங்கு காணலாம்...
மிசிசிப்பி மாநிலம்!
அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதியினர் ஜாக்சன் எனும் மகப்பேறு மருத்துவரிடம் குழந்தை பேறு சிகிச்சைக்காக சென்றனர். ஜாக்சனும் அவர்களுக்கு சிகிச்சை அளித்து, மரபணு பரிசோதனை மேற்கொண்டார்.
மரபணு சோதனை!
மரபணு சோதனையின் போது தான் ஒரு அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியானது. அதாவது, பரிசோதனைக்கு வந்த கணவன் மனைவி ஒரே மரபணு கொண்ட இரட்டையர்கள் என்பது தான் அந்த அதிர்ச்சியான தகவல்.
கார் விபத்து!
1984-ல் நடந்த கார் விபத்தில் கணவன் - மனைவி உயிரிழந்துள்ளனர். அவர்களது இரட்டை குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களில் ஆண் குழந்தையை ஒருவரும், பெண் குழந்தையை ஒருவரும் எடுத்து வளர்த்தனர்.
கல்லூரி!
இந்த இருவருக்கும் தாங்கள் யார் என்ற விவரம் தெரியாமல், ஒரே கல்லூரியில் பயின்றனர். பயின்ற போதே காதலும் கொண்டனர். பிறகு திருமணமும் செய்துக் கொண்டனர்.
கர்ப்பம் தரிக்கவில்லை...
திருமணமாகியும் அப்பெண் கர்ப்பம் தரிக்கவில்லை என தெரியவர இருவரும் மகபேறு மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ள முடிவு செய்தனர். அப்படி தான் இவர்கள் இருவரும் ஜாக்சன் எனும் மருத்துவரை கண்டனர்.
மனைவி நம்பவில்லை...
மரபணு பரிசோதனையில் வந்த தகவலை முதலில் மனைவி நம்ப மறுத்தார். இந்த தருணத்தில் தான் மருத்துவர் ஜாக்சன் ஊடகங்களிடம் இந்த வினோத நிகழ்வை பற்றி கூறினார். இவர்களது நலன் கருதி இருவரின் பெயர் மற்றும் படத்தை பகிர மருத்துவர் மறுத்தார்.
தவிப்பு!
இப்போது தொடர்ந்து சேர்ந்து வாழ்வதா? அல்ல பிரிவதா? என்ற பரிதவிப்பில் செய்வதறியாது திகைத்து போய் இருக்கின்றனர் அந்த தம்பதிகள்.
போலி செய்தி!
உலகெங்கிலும் காட்டுத்தீ போல பரவிய இந்த செய்தி போலி என டெயிலி மெயில் யூ.கே இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த போலி செய்தி, பல சர்வதேச ஊடகங்களிலும் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.