Just In
- 30 min ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- 2 hrs ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 2 hrs ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 3 hrs ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
Don't Miss
- News லண்டன் தெருவில்.. ரத்தம் சொட்ட சொட்ட பாய்ந்த 2 குதிரைகள்.. பக்கிங்ஹாம் அரண்மனை கிட்ட ஒரே பரபரப்பு
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொண்டால் மீண்டும் கருத்தரிக்க முடியும் - ஆய்வில் தகவல்
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்டால், அப்போதே மீண்டும் கருத்தரிக்க முடியும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்திய ஒரு புதிய ஆய்வில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்டால், அப்போதே மீண்டும் கருத்தரிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இறுதியில் பிரசவத்தின் போது, அப்பெண் ஒரு குழந்தைக்கு பதிலாக இரண்டு குழந்தைகளை பிரசவிப்பார்கள் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இப்போது இக்கட்டுரையில் அந்த ஆய்வு குறித்தும், அது எப்படி எனவும் விரிவாக காண்போம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சூப்பர்ஃபெடேஷன் (Superfetation)
இப்படி கருத்தரிக்கும் நிலைக்கு 'சூப்பர்ஃபெடேஷன்' என்று பெயர். பொதுவாக இம்மாதிரியான நிலை மிருகங்களிடம் தான் இருக்கும். ஆனால் மிகவும் அரிதாகவே மனிதர்களால் முடியும். ரிப்போர்ட் ஒன்றின் படி, இதுவரை சுமார் 11 பேருக்கு இம்மாதிரி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
கருமுட்டையின் வளர்ச்சி
கர்ப்பமாக இருக்கும் போது ஆரம்ப காலத்தில் பெண்களின் உடலில் கருமுட்டைகள் வெளிவரும். இந்நேரம் உடலுறவில் ஈடுபடும் போது, இரண்டாம் கருவானது முதல் கரு உருவான சில நாட்களுக்குள் உருவாகும். இதன் காரணமாக இறுதியில் இரண்டு குழந்தைகளை பிரசவிக்கக்கூடும்.
எளிமையானது அல்ல
இம்மாதிரி தாமதமாக கரு உருவானாலும், பிறக்கும் போது இரண்டு குழந்தைகளும் தான் வெளியே வரும் என ரிபோர்ட்டுகள் கூறுகின்றன. தனித்தனியாக இடைவெளி விட்டு கரு உருவானதால், கடைசியாக உருவான குழந்தை, முதலில் உருவான குழந்தையை விட சற்று பலவீனமாகவே இருக்கும். அதாவது, இந்நிலையில் பிறக்கும் இரண்டாவது குழந்தை குறைமாதத்தில் பிரசவித்தாகவே கருதப்படுவதால், இரண்டாவது குழந்தை உயிருடன் இருக்கும் வாய்ப்பும் குறைவாகவே இருக்குமாம்.
ஆபத்தான நிலை
இம்மாதிரியான நிலை அரிதானதாகவே இருந்தாலும், எந்த ஒரு பெண்ணும் இவ்வாறு கருத்தரிப்பதை விரும்பமாட்டார்கள். முதல் குழந்தை ஆரோக்கியமாக இருந்து, தனது இரண்டாவது குழந்தை குறைப்பிரசவ குழந்தையாக இருந்தால், அதுவும் உயிர் பிழைப்பதே கடினம் என்ற நிலையில் இருந்தால், அதுவே அந்த தாயின் உணர்வை பெரிதும் பாதித்துவிடும்.
இம்மாதிரியான அரிய நிலை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுடன் கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்.