Just In
- 34 min ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 1 hr ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 2 hrs ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 3 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
Don't Miss
- Finance இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்.. பில்லியனரின் தில்லாங்கடி வேலை.. காதலியுடன் ரகசிய வாழ்க்கை..!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இறந்த குழந்தை, இறுதி சடங்கிற்கு ஒரு நிமிடத்திற்கு முன் உயிர் பெற்ற அதிசயம்!
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக செவிலியர்கள் கூற, இறுதி சடங்கிற்கு ஒரு நிமிடத்திற்கு முன் குழந்தை உயிருடன் இருப்பது தெரிய வந்த கதை.
நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தான் ஒவ்வொரு பெற்றோரது கனவாகவும் இருக்கும். ஒருவேளை பிரசவித்த கர்ப்பிணி, குழந்தையை குறைப்பிரசவத்தில் பெற்றெடுத்தால், அது அப்பெண் மற்றும் குழந்தையின் தந்தைக்கு பெரும் மன அழுத்தத்தைத் தரும்.
இந்த வழக்கில் குறைப்பிரசவத்தில் பிறந்த புதிய குழந்தை இறந்துவிட்டதாக, பிரசவம் பார்த்த செவிலியர்கள் கூறிவிட்டனர். அதுவும் மருத்துவர் இல்லாத நேரத்தில் குழந்தை பிறந்ததோடு, மருத்துவர் பரிசோதித்து சொல்லாமலேயே அம்மாதிரியான முடிவை தெரிவித்துவிட்டனர்.
அதிர்ஷ்டவசமாக அக்குழந்தைக்கு இறுதி சடங்கை செய்ய ஆரம்பிக்கும் போது குடும்ப உறுப்பினர்கள் சரியாக கவனித்ததால், குழந்தை உயிருடன் இருந்தது தெரிய வந்தது. இந்த கதையை விரிவாக தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அரசு மருத்துவமனை
ராஜஸ்தானின் புண்டியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பிரசவ வலி அதிகமானதன் காரணமாக, மகப்பேறு மருத்துவர் இல்லாமலேயே வெறும் செவிலியர்களின் உதவியுடன் குறைப்பிரசவத்தில் குழந்தைப் பிறந்தது.
22-24 வார குழந்தை
இந்த குழந்தை கருவுற்று 22-24 வாரங்கள் தான் ஆகியிருக்கும். அதற்குள் அந்த குழந்தை பிறந்துவிட்டது. குழந்தை பிறக்கும் போது, அதன் எடை 350-400 கிராம் தான் இருக்கும்.
குழந்தை இறந்துவிட்டதாக கூறிய செவிலியர்
பிரசவத்தின் போது குழந்தை இறந்துவிட்டதாக செவிலியர்கள் தெரிவித்துவிட்டனர். அதுவும் அவர்கள் குழந்தை பிறந்த பின், அதற்கு செய்ய வேண்டிய முறைய சோதனைகள் ஏதும் செய்யாமல், குழந்தை அசையவில்லை மற்றும் மூச்சு விடவும் இல்லை என்பதை மட்டும் பார்த்து, குழந்தை இறந்துவிட்டதாக முடிவெடுத்துவிட்டனர்.
குடும்ப உறுப்பினர்களிடம் இறந்த குழந்தை ஒப்படைப்பு
செவிலியர்கள் குடும்ப உறுப்பினர்களிடம், குழந்தையிடம் எவ்விட அசைவும் இல்லை, எனவே குழந்தை இறந்துவிட்டது, மேற்படி செய்ய வேண்டியதை செய்து கொள்ளுங்கள் என்று கூறி இறந்த குழந்தையை ஒப்படைத்துவிட்டனர்.
குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் சுவாசம்
இறந்துவிட்ட குழந்தைக்கு இறுதி சடங்கு நடத்துவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன், குடும்ப உறுப்பினர்கள் குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் மூச்சுவிடுவதைப் பார்த்து, குழந்தை உயிருடன் தான் உள்ளது என்பதை அறிந்து கொண்டனர். ஒரு பக்கம் இச்சம்பவம் அவர்களுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தாலும், மறுபக்கம் தவறாக கூறிய செவிலியர்களின் மீது அளவில்லாத கோபத்துடன் இருந்தனர்.
மருத்துவமனை மீது வழக்கு
குழந்தையின் குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு, நீதி வேண்டுமென்று போராடினர். பின் பொறுப்பின்றி நடந்து கொண்ட செவிலியர்களின் செயலால், மருத்துவமனை மீது வழக்கு பதியப்பட்டது.