Just In
- 1 hr ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 5 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியாவில் கொண்டாடப்படும் வெவ்வேறு விதமான நவராத்திரி வகைகள்
இந்தியாவில் நவராத்திரி விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக வெவ்வேறு பெயர்களுடன் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பண்டிகைகளின் பெரிய பட்டியலில் இது முக்கிய இடத்தைப் பிடிப்பதோடு உலக அளவில் அதிக மக்கள் கூடும் விழாவாகவும் உள்ளது.
நவராத்திரி என்பது அதன் பெயருக்கு ஏற்ப ஒன்பது இரவுகளைக் குறிக்கும். இந்த பண்டிகை ஒன்பது நாட்களுக்கு நடைபெறுவதுடன் ஒவ்வொரு நாளும் தனக்கென தனிப்பட்ட பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. நவராத்திரி வலிமையின் கடவுளான சக்தியை போற்றும் விதமாக நடத்தப்படும் ஒன்பது நாள் பண்டிகையாகும்.
ஒவ்வொரு நாளும் சக்தியின் ஒவ்வொரு அவதாரத்தையும் வணங்கி வழிபாடு செய்யப்படுகிறது. இந்த நவராத்திரி நாட்களில் செய்யப்படும் வழிபாடானது மனா வலிமையையும் உறுதியையும் கூட்டி தீமைகளை எதிர்த்துப்போராதா நமக்கு உதவுவதாக நம்பப்படுகிறது.
பண்டைய காலத்தில் பல்வேறு விதமான நவராத்திரி வழக்கங்கள் நடைமுறையில் இருந்தன. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்த பல்வேறு வகையான வழக்கங்களை இன்றுவரை கடைப்பிடித்து வருகிறார்கள். இதில் எல்லாம் தலையாயது ஒன்பது நாட்களும் விரதம் இருப்பது.
அதுபோக, விதை விதைப்பது, ஒன்பது கோள்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவது மற்றும் இறுதியாக மஹாநவமி மற்றும் விஜயதசமியைக் கொண்டாடுவதும் நவராத்திரியின் முக்கிய அங்கங்கள். நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது நாட்களிலும் பல்வேறு சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. எனினும் இந்தியா முழுவதும் பின்பற்றப்படும் சில நவராத்திரி பழக்க வழக்கங்களை இப்போது நாம் பாக்கலாம்.
சாரதா நவராத்திரி
நவராத்திரிகளில் மிகவும் முக்கியமான ஒன்று இந்த சாரதா நவராத்திரி. இது பரவலாக கிழக்கு இந்தியா முழுவதும் கொண்டாடுகின்றனர். அப்போதுதான் துர்கை மகிஷாசுரனை வாதம் செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்னும் சில இடங்களில் இதை மகா நவராத்திரி என்றும் அழைக்கின்றனர். இராமர் தன மனைவி சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லுமுன் இந்த பூஜையை செய்ததால் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
வசந்த நவராத்திரி
நவராத்திரி பூஜைகளில் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்தது இது. இந்தியாவின் வட மாநிலங்கள் முழுவதும் பரவலாக வசந்த நவராத்திரி கொண்டாடப்படுவதோடு அங்குள்ள வைஷ்ணவி தேவி கோவிலில் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். இந்த பூஜையை சித்ரா நவராத்திரி என்றும் கூறுவர்.
ஆஷாட நவராத்திரி என்று சில பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை குஹ்ய நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆஷாட நவராத்திரி சக்தியின் ஒன்பது வடிவங்களுக்கு அர்பணிப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பவுஷ் நவராத்திரி
நவராத்திரியின் மற்றுமொரு வகையான இது வளர்பிறையில் வரும் சுக்ல பட்ச திதியில் கொண்டாடப் படுகிறது.
இந்தியா முழுவதும் சில நவராத்திரிப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் சாரதா மற்றும் வசந்த நவராத்திரிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.