Just In
- 48 min ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 4 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தஞ்சை பெரிய கோவில் சென்று வந்து பதவி இழந்த அரசியல் பிரபலங்கள்!
தஞ்சை பெரிய கோவில், பிரகதீஸ்வரர் கோவில், பெருவுடையார் கோவில் என்று அறியப்பட்டு வருகிறது. ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த பிரசித்தி பெற்ற பெரிய சிவத்தலம். ஆயிரம் ஆண்டுகளை கடந்து தமிழர் பெருமையை தாங்கி நிற்கிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கும் தமிழக, இந்திய அரசியல் பிரபலங்களுக்கும் ஓர் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
பலரும் அறிந்திராத தில்லை சிதம்பரம் கோயிலைப் பற்றிய இரகசியங்கள்!!
ஆனால், இது அவர்களை சற்று அச்சம் கொள்ள வைக்கும் தொடர்பாகும். அதாவது பெரிய பதவியில் இருக்கும் இந்திய / தமிழக அரசியல் பிரபலங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று திரும்பினால் அவர்களது பதவி அல்லது உயிருக்கு அபாயம் ஏற்படும் என்ற அச்சம் தான் அது.
அசாதாரணமான கோயில்களும் அதை சுற்றியிருக்கும் மர்மங்களும்!!
இது பல காலம் தொட்டு தொடர்ந்து வரும் துர்ச்சகுனமாக காணப்படுகிறது. எந்தெந்த அரசியல் பிரபலங்கள் இது போன்று தஞ்சை பெரிய கோவில் சென்று வந்த பிறகு அபாயத்தை சந்தித்துள்ளனர் என இனிக் காண்போம்...
கருணாநிதி
தஞ்சை பெரிய கோவில் உள்ளே புதிதாக வராஹி அம்மன் சிலை வைக்க பிரச்சனை எழும்பி, பிறகு அந்த புதிய மண்டபம் இடித்த அதே நாளான ஜனவரி 31 1976-ம் ஆண்டு தான் கருணாநிதி அவர்களின் தலைமையிலான தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
இந்திராகாந்தி
அந்த வராஹி அம்மன் மண்டபத்தை இடிக்க உத்தரவிட்ட பிரதமர் இந்திராகாந்தியின் பதவியும், ஆட்சியையும் அதன் பிறகு பறிபோனதும் குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும் போது ராஜ ராஜ சோழனின் ஆயிரமாவது முடிசூட்டு விழா நடத்தப்பட்டது. அந்த வைபவத்திற்கு சென்ற போது அங்கே சற்று மயக்கம் அடைந்தார் எம்.ஜி.ஆர். அதன் பிறகு தான் எம்.ஜி.ஆர்-ன் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.
மீண்டும் தி.மு.க
இந்த அபசகுனத்தை உடைக்கிறேன் என்று சபதம் எடுத்து மீண்டும் ஆட்சியில் இருந்த கருணாநிதி அவர்களின் தி.மு.க அரசு தஞ்சை பெரிய கோவிலும் 1000 ஆண்டு விழாவை ஏற்பாடு செய்தது. இந்த விழாவிற்கு சென்று வந்த பிறகு பல தி.மு.க பிரபலங்கள் பதவி இழந்து, பல இன்னல்களை சந்தித்தனர்.
ராசா
மத்திய அமைச்சராக இருந்த ராசா பதவி இழந்ததோடு, ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கும் சென்றார்.
கனிமொழி
ராசாவை தொடர்ந்து அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதியின் மகளான கனிமொழியும் சிறைக்கு சென்றார்.
கோ.சி.மணி
மேலும், கோ.சி மணி நோய்வாய்ப்பட்டு, உடல்நலம் மோசமடைந்தார்.
பழனி மாணிக்கம்
பழனி மாணிக்கம் பதவியும் இழந்து, மாவட்ட செயலர் பொறுப்பையும் இழந்தார்.
படுதோல்வி
வரலாறு காணாத வண்ணம், தி.மு.க மீண்டும் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இதன் பிறகு அரசியல் பிரபலங்களுக்கு மத்தியில் மேலும், தஞ்சை பெரிய கோவில் மீதான அச்சம் அதிகமானது.