Just In
- 7 min ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 1 hr ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- 2 hrs ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- 4 hrs ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Don't Miss
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Movies இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
90-களுக்கு முன் தீபாவளி கொண்டாட்டம் : நெகிழ்வூட்டும் நினைவுகளின் பயணம்!
இன்றைய தலைமுறை அறியாத, சென்ற தலைமுறை கொண்டாடிய தீபாவளி நினைவுகள் பலவன இருக்கின்றன. ஸ்மார்ட் போன், யூடியூப், ஃபேஸ்புக் எல்லாம் இல்லாத ஒரு மாபெரும் இன்பத்தின் குவியல் அது.
தீபாவளி கொண்டாட்டம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு இன்றைய தலைமுறை ஒரு வார்த்தையில் பதில் கூறிவிட்டு சென்று விடுவார்கள். சென்ற தலைமுறையிடம் கேளுங்கள், ஒரு கட்டுரையே எழுதுவார்கள். நான்கைந்து நாட்களும் கொண்டாட்டம். தீபாவளி வரும் பத்து நாளுக்கு முன்னரே வீதிகளில் ஆங்காங்கே பழைய பட்டாசுக்கள் வெடித்து சிதறும்.
தாத்தா, பாட்டி தீபாவளி பணம், அம்மா சுடும் சுவையான பலகாரம். மாமா, பெரியப்பா, சித்தப்பா வீடுகளுக்கு வந்து செல்வது. தையல் காரரிடம் துணி தைக்க கொடுத்து காத்திருந்து வாங்கி உடுத்துவது. நிச்சயம் இந்த விஷயங்கள் உங்களை குழந்தை பருவத்திற்கு கூட்டி செல்லும்.
நேற்று வாட்ஸ்-அப்பில் எனக்கு வந்த ஒரு செய்தியின் தொகுப்பில் இருந்து...
நினைவு #1
நண்பர்களில் யாருக்கு அதிக தீபாவளி பணம் கிடைத்தது என்ற தேடல்.
நினைவு #2
தைக்க கொடுத்த தீபாவளி புதுத்துணியை தையல்காரர் தைத்து கொடுத்து விடுவாரா ஏக்கம்.
நினைவு #3
ஒரு வாரத்திற்கு முன்னதாக அம்மா தீபாவளி பலகாரம் செய்யும் போது, அருகே அமர்ந்து சுடசுட ருசிப் பார்ப்பது.
நினைவு #4
எண்ணெய் தேய்த்து, ஒருசில வார இதழ்கள், தின பத்திரிக்கைகள் இலவசமாக இணைத்து தரும் கங்கா நீர் கலந்து குளிப்பது.
நினைவு #5
தெருவில் முதல் ஆளாக எழுந்து யார் பட்டாசு வெடிப்பது என்ற போட்டிப் போட்டு சீக்கிரமாக முதல் சரம் வெடிப்பது.
நினைவு #6
ஆசை, ஆசையாக வாங்கி வைத்த புத்தாடையில், அம்மா எப்போது மஞ்சள் வைத்து தருவார் என காத்திருப்பது. (சிலருக்கு அந்த மஞ்சள் வைப்பது பிடிக்காது. அதற்கு அடம் பிடிப்பது தனிக் கதை)
நினைவு #7
வேண்டாம், வேண்டாம் என அடம்பிடித்து, கண்கள் எரிய, கண்ணீர் கசிய சீயக்காய் தேய்த்து அம்மா கையால் தலைக்கு குளிப்பது.
நினைவு #8
அப்பா, அம்மா காலில் விழுந்து தீபாவளி அன்று புத்தம் புதிய தாளை வாங்கி கசங்காமல் பத்திரப்படுத்துவது.
நினைவு #9
ஊர் முழுக்க பட்டாசு வாசனை அடித்தாலும், சரியாக 8 மணிக்கு அம்மா ஸ்பெஷலாக சமைக்கும் உணவின் வாசனை மூக்கை துளைக்க, பட்டாசு வெடிப்பதை விட்டுவிட்டு ஓடி சென்று சாப்பிடுவது.
நினைவு #10
சரம் தீர்ந்து விட்டால் பிஜிலி வெடியை சரம் போல கோர்த்து வெடிப்பது. வருடம் முழுக்க ஒதுக்கப்பட்டாலும், தீபாவளி அன்று தேடப் பிடித்து பழைய பீர் பாட்டில் எடுத்து ராக்கெட் விடுவது.