Just In
- 2 min ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 41 min ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 1 hr ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 2 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- Sports தோல்வியின் போது ஒளிந்துகொள்ளும் ருதுராஜ்.. செய்தியாளர்களை சந்திக்கவே பயம்.. சோகத்தில் சிஎஸ்கே!
- News ஐஏஎஸ்னா சும்மாவா? இதுதான் யுபிஎஸ்சி தேர்வின் மறுபக்கம்! 12 முறை தோற்றவரின் அனுபவம்! ரொம்பவே ரிஸ்க்
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
நெஞ்சை பதைபதைக்க வைத்த சில புகைப்படங்கள்!
வாழ்வில் நடந்த சில தருணங்களை மீண்டும் நினைவூட்ட எடுக்கப்படுவது தான் புகைப்படங்கள். சிலருக்கு புகைப்படங்கள் எடுப்பது விருப்பமான ஒன்றாக இருக்கும். அப்படி உலகில் சிலர் எடுத்த புகைப்படங்களுள் சில பார்த்ததுமே நம் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வகையிலும், இன்னும் சில ஆச்சரியப்படுத்தும் வகையிலும் இருக்கும்.
இங்கு உலகில் உள்ள மிகவும் பிரபலமான சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் பாருங்கள்.
பெரிய கல்லறை
1941 முதல் 1945 இடைப்பட்ட காலத்தில், சுமார் 20,000 சோவியத் போர் கைதிகள் மற்றும் பேர்கன்-பெல்சனில் இருந்த 50,000-த்திற்கும் மேற்பட்டவர்கள் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டனர். இது அப்படி கொன்று குவித்திருக்கும் போது எடுத்த போட்டோ.
Image Courtesy
அமெரிக்காவில் தூக்கிலிடப்பட்ட கருப்பின மக்கள்
இந்த புகைப்படம் லாரன்ஸ் பெய்ட்லர் என்பவரால் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படமானது கற்பழிப்பு செய்ததால் இரண்டு கருப்பினத்தவருக்கு தூக்கு தண்டனை வழங்கிய போது எடுத்தது. ஆனால் இவர்கள் மீது சுமத்தப்பட்ட கற்பழிப்பு பழி பொய்யானது என்று நாளடைவில் தெரிய வந்தது.
Image Courtesy
விமான விபத்து
இது ட்வின் டவரில் விமானம் மோதி நொறுங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த புகைப்படத்தை ஸ்டீவ் லுட்லம் என்பவர் எடுத்தார். இந்த புகைப்படம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் வந்தது.
Image Courtesy
விழும் மனிதன்
இந்த புகைப்படம் ரிச்சார்ட் ட்ரூ என்பவரால் எடுக்கப்பட்டது. இது உலக வர்த்தக மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, மேலே இருந்து கீழே குதிக்கும் போது எடுத்தது. இருப்பினும் அவர் மரணத்தை தான் சந்தித்தார்.
Image Courtesy
இந்தியாவில் ஏற்பட்ட விஷ வாயு சம்பவம்
இந்த புகைப்படம் பார்ப்போரின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருந்தது. இந்த புகைப்படத்தை பப்லோ பர்த்தலமேயு என்பவர் இந்தியாவின் போபாலில் ஏற்பட்ட விஷவாயு சம்பவத்தின் போது எடுத்தார்.
Image Courtesy
வியட்நாம் போரின் கோரம்
எடி ஆடம்ஸ் என்பவர் தான் இந்த கொடிய புகைப்படத்தை எடுத்தார். இம்மாதிரி சுமார் 12-க்கும் மேற்பட்டோர் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றால் பாருங்கள்.
Image Courtesy
ஈராக்கில் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவது
இந்த புகைப்படம் அரபு கிரைப் சிறையில் இருந்த அமெரிக்க இராணுவத்தினர் மற்றும் சிஐஏ ஏஜெண்ட் ஒருவரால் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் ஈராக்கில் உள்ள கைதிகள் எவ்வளவு கொடுமையான முறையில் சித்திரவதை மற்றும் பலாத்காரம் போன்வற்றிற்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர் என்பதை வெளிக்காட்டுகிறது.
Image Courtesy