Just In
- 2 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 2 hrs ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 3 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 4 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- Movies வாடகைக்கு உடை வாங்கும் நடிகை.. இதுலக்கூட கஞ்சத்தனமா? கிண்டலடிக்கும் பேன்ஸ்!
- News எல்லா தப்பையும் நீங்க தான் பண்ணீங்க..கக்கூஸ் கூட போக முடியல! திணறும் ரயில் பயணிகள்..தீர்வுதான் என்ன?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
உலகிலேயே பெரிய டைனோசர் இந்தியாவில் எங்கு இருந்தது என உங்களுக்கு தெரியுமா?
குஜராத்தில் இருக்கும் சிறிய ஊர் பலசினோர். ஆனால், இங்கு தான் உலகிலேயே பெரிய டைனோசர் எலும்புக்கூடு இருக்கிறது என தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். புதை படிம ஆய்வாளர்கள் இந்த இடத்தில் ஏழு வகையான டைனோசர்கள் வாழ்ந்திருக்கலாம் என கருதுகின்றனர்.
சிந்து சமவெளி நாகரீகத்தை பற்றி பலரும் அறியாத தகவல்கள்!
மேலும், ஆராய்ச்சியாளர்கள் இங்கு 10,000 டைனோசர் முட்டைகளையும் கண்டெடுத்துள்ளனர். இது தான் உலகிலேயே பெரிய மூன்றாவது டைனோசர் குஞ்சு பொரிப்பகம் எனவும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பலசினோர்
பலசினோர் எனும் ஊரில் இருக்கும் கிராமம் தான் ரையோலி (Raiyoli). ஓர் விபத்தாக தான் இந்த இடம் 1981-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. புவியியலாளர்கள் இந்த இடத்தை கனிம வளம் குறித்து ஆய்வு செய்துக் கொண்டிருக்கும் போது கண்டுபிடித்தனர்.
Image Courtesy - Hardik Sikenis
உலக சுற்றுலா பயணிகள்
அப்போதிருந்து, இப்போது வரை உலக சுற்றுலா பயணிகளில் இருந்து, அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் வரை பெரும்பாலானோருக்கு பிடித்தமான இடமாக மாறிவிட்டது இவ்விடம்.
Image Courtesy - Gulveen Punia
ஆலியா சுல்தானா பாபி
நன்றி கூறும் விதமாக பலசினோர்-ன் முன்னாள் இளவரசியான ஆலியா சுல்தானா பாபி இந்த இடத்தை ஆதரித்தும், பாதுகாத்தும் வருகிறார்.
Image Courtesy - Het Upadhyay
டைனோசர் இளவரசி
சிலர் இவரை டைனோசர் இளவரசி என்றும் பரவலாக கூறுகின்றனர். இவர் இந்த இடத்திற்கு சுற்று பயணம் மேற்கொள்வதற்கு நிறைய உதவுகிறார். மேலும், இந்த பகுதியில் ஆங்கிலம் பேசி வருபவர்களுக்கு உதவ இருக்கும் ஒரே நபர் ஆலியா சுல்தானா பாபி தான்.
Image Courtesy - Debasish Adhikari
தனித்தன்மை
பலசினோர்-ல் மட்டும் தான் இன்றளவும் சுற்றுலா பயணிகள் 65 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர்-ன் முட்டை படிவங்களை தொட்டு பார்த்து ரசிக்க முடியும்.
Image Courtesy - Ajay Aeri
தொல்பொருள் ஆராய்ச்சி?
இந்த இடம் தொல்பொருள் ஆராய்ச்சி பகுதியாக அல்லாமல், சுற்றுலா பயணிகளுக்கான இடமாக தான் பிரபலமானது. இங்கு ம்யூசியம் கட்ட ஐந்த ஆண்டுகள் ஆனது. இந்த இடம் ஓர் கைவிடப்பட்ட இடம் போன்று தான் காட்சியளிக்கிறது.
Image Courtesy - Ajay Aeri
முப்பது ஆண்டுகள்
மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட இந்த இடத்திற்கு உரிய கவனம் இன்றளவும் கிடைக்கப்படவில்லை. ஏன் நம்மில் பலருக்கே இந்த இடத்தை பற்றிய தகவல்கள் தெரியாது.
Image Courtesy - Harsh Parmar
அகமதாபாத்
அகமதாபாத்தில் இருந்து அரை மணிநேரம் பயணம் மேற்கொண்டால் பலசினோர் பகுதியை சென்றடையலாம். அகமதாபாத்திற்கு விமானம் மற்றும் ரயில் மூலம் செல்ல எளிய போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன.
Image Courtesy - Ajay Aeri
கார்டன் பேலஸ்
பலசினோ-ல் ஓர் கார்டன் பேலஸ் இருக்கிறது. இது ஓர் பாரம்பரியமான தங்குமிடமாகும். இந்த இடம், இங்கு ஆண்ட முந்தைய ஆளுநர்களின் குடும்பத்தாரால் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நீங்கள் குடும்பத்துடன் தங்க முடியும்.
Image Courtesy - Debasish Adhikari