For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீரடி சாய் பாபா நிகழ்த்தியுள்ள அற்புதங்கள்!!!

By Super
|

சீரடியின் துறவியான சாய் பாபா தன் பக்தர்களின் உள்ளங்களை ஆண்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய பக்தர்களாக இல்லாதவர்கள் கூட அவருடைய வாழ்க்கை மற்றும் குணாதிசயங்களைப் பற்றி கேள்விப்படும் போது பிரமிப்பை அடைவார்கள் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை. சிலர் அவரை கடவுளாக வணங்குகின்றனர். இன்னும் சிலரோ அவரை, துன்பங்களில் இருந்து மனித இனத்தை காக்க கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய துறவியாக கருதுகின்றனர்.

இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளாரா?

சாய் பாபாவின் வாழ்க்கையாகட்டும் அல்லது அவர் ஆற்றிய அற்புதங்கள் ஆகட்டும், அவரைப் பற்றிய அனைத்துமே அவரை நம்பும் மக்களின் மத்தியில் வியப்பை ஏற்படுத்தாமல் இருக்காது. அவருடைய பிறப்பு பற்றிய கதை பெரும் விவாதத்துக்குள்ளானது. அவர் இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு மகனாக பிறந்தார் என சிலர் கூறுகின்றனர். அவர் காது குத்திக்கொள்ளவில்லை என்பதால் சிலர் அவரை இஸ்லாமியர் என்றும் கூறுகின்றனர்.

சிவபெருமான் ஆற்றியுள்ள 4 அதிர்ச்சியூட்டும் அற்புதங்கள்!!!

ஆனால் சாய் பாபா எப்போதுமே கூறுவது, "கடவுள் ஒருவரே". அவருடைய இள வயதில் இந்து கோவில்களில் அவர் அல்லாவை புகழ்வார் என்றும், மசூதிகளில் அவர் ராமரையும் சிவனையும் பற்றிய பஜனைகளைப் பாடுவார் என்றும் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Miracles Performed By Sai Baba

Let us read about some of the many miracles Sai Baba performed for the good of mankind.
Desktop Bottom Promotion