Just In
- 3 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 8 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 9 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 10 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- News பாஜக வேட்பாளரான கணவரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்த மனைவி.. 2019லும் இதேபோல ஒரு சம்பவம்!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தெரிந்ததும், தெரியாததும்- அக்டோபர் 3!
வருடத்தின் ஒவ்வொரு நாட்களும் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களாலும், அரிய கண்டுப்பிடிப்புகளாலும், துயர சம்பவங்களாலும் நிறைந்துள்ளன. எண்ணற்ற போர், அவ்வப்போது விடுதலை, வெடிகுண்டு தாக்குதல்கள், இயற்கை சீற்றங்கள் என மனிதர்களின் வாழ்க்கையை பல வகையில் சிதைவு ஏற்படுத்திய தருணங்கள் ஏராளம்.
அந்த வகையில் இன்றைய தினமான அக்டோபர் 3-ல் வரலாற்றில் என்னெவெல்லாம் நடந்திருக்கிறது. அவற்றால் ஏற்பட்ட பயன்கள் என்னென்ன? பாதிப்புகள் என்னென்ன? என்று இனிக் காணலாம்.....
முக்கிய குறிப்புகள்
- கொரியா நாடு உருவாக்கம்
- யூகொஸ்லாவிய இராச்சியம் அமைக்கப்பட்டது
- ஈராக் குடியரசு உருவாக்கப்பட்டது.
- விண்வெளியை அடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருள்
- அட்லாண்டிஸ் விண்ணோடம் முதலாவது விண்வெளிப் பயணம்
கிமு 2333
கொஜொசியோன் நாடு (தற்போதைய கொரியா) டங்கூன் வாஞ்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது. கொரியா என்பது கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தில் இருந்த ஒரு முன்னாள் நாடாகும். இப்பகுதி மக்கள் கொரிய இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பேசும் மொழி கொரிய மொழியாகும். 1948 இல் கொரியா பிரிந்து வட கொரியா, தென்கொரியா என்று ஆனது
1739
ரஷ்ய-துருக்கி போர், 1736-1739 முடிவில் ரஷ்யாவுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
1929
சேர்பியா, குரொவேசியா, சிலவேனியா என்று மூன்று பகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு அதற்கு யூகொஸ்லாவிய இராச்சியம் எனப் பெயரிடப்பட்டது.
1932
ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. 1921 ஆம் ஆண்டு ஒரு முடியரசு நிறுவப்பட்டது மற்றும் 1932 ல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றது. 1958 ஆம் ஆண்டு மன்னர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட பின் ஈராக் குடியரசு உருவாக்கப்பட்டது.
1935
இத்தாலி எதியோப்பியாவைக் கைப்பற்றியது.
1942
செருமனியில் இருந்து ஏ4-ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் விண்வெளியை அடைந்த இதுவே முதல் முறையாகும்.
1952
ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.
1962
சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி ஷீரா 6 தடவை பூமியைச் சுற்றினார்.
1985
அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது. அட்லாண்டிஸ் கடைசியாக சென்ற பயணம் வரை கணக்கிட்டு பார்த்ததில், 306 நாட்களை விண்ணில் கழித்திருக்கிறது. 4,848 சுற்றுக்களை (orbits) மேற்கொண்டு மொத்தம் 125,935,769 மைல்கள் (202,673,974 km) தூரம் பயணித்துள்ளது.
Image Courtesy
1990
ஜெர்மனியின் கிழக்கும், மேற்கும் ஒன்றாக இணைந்தன. ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு மேற்கு ஜெர்மனியுடன் இணைந்தது.
2013
இத்தாலியில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரையில் உயிரிழந்தனர்.
பிறந்தநாள்
நடிகர் சத்தியராஜ் மற்றும் மலேசிய எழுத்தாளர் முரு. சொ. நாச்சியப்பன் அவர்களின் பிறந்தநாள் இன்று.