Just In
- 4 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 6 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 7 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 7 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
போரில் ராக்கெட் பயன்படுத்தி ஆங்கில படைகளை பயத்தில் உறைய வைத்த திப்பு சுல்தான்!!
ஹைதர் அலியின் மரணத்திற்கு பிறகு ஆட்சி அரியணையில் ஏறினார் திப்பு. திப்புவை இவரது நெருங்கிய வட்டம் மைசூரின் புலி என்று புனைப்பெயர் வைத்து அழைப்பார்கள்.
சிறப்புமிக்க இந்திய அரசர்களில் திப்பு சுல்தானும் ஒருவர். இவர் ஹைதர் அலியின் இரண்டாவது மனைவியான ஃபாத்திமாவிற்கு மகனாக பிறந்தவர். ஹைதர் அலியின் மரணத்திற்கு பிறகு ஆட்சி அரியணையில் ஏறினார் திப்பு. திப்புவை இவரது நெருங்கிய வட்டம் மைசூரின் புலி என்று புனைப்பெயர் வைத்து அழைப்பார்கள்.
கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!!
ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு துரத்த பிரான்ஸ் நாட்டு மாவீரன் நெப்போலியனுடன் திப்பு பேச்சு வார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் மற்றும் மைசூர் அரசுக்கு மத்தியில் நடந்த மூன்றாவது மற்றும் நான்காம் மைசூர் போரின் போது, ஆங்கில கூட்டுப் படைகளினால் தோல்வியுற்றார்.
மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!!!
தனது தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கடந்த 1799-ம் ஆண்டு மே நான்காம் நாள் போரின் போது உயிரிழந்தார். இவரது ஆட்சியின் சிறப்புகள் மிகவும் அற்புதமானது...
போரில் ராக்கெட் தாக்குதல்
திப்பு சுல்தான் போரில் ராக்கெட் தாக்குதல்களை பயன்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர். இதற்கு சான்றாக, வாலோபஸ் விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு வரைபடத்தில், போரில் ஆசியர்கள் ராக்கெட் பயன்படுத்தும் படம் உள்ளதையும் அது மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர் மேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பதையும் இந்திய முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்துள்ளார்.
விவசாயத்தில் புதுமை
அந்த காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரக பயிர்கள் என்று விவசாய துறையில் நிறைய புதுமைகளை புகுத்தியவர் திப்பு சுல்தான்.
கப்பல் தளம்
இவரது ஆட்சி களத்தில் கப்பல் கட்டும் தளம் அமைத்து, பல பெரும் இராஜ்ஜியத்தையே வியப்பில் ஆழ்த்தியவர் திப்பு.
சகோதரத்துவம்
காலம், காலமாக இந்து, இஸ்லாமிய பிரச்சனை நிலவி வந்துக் கொண்டிருந்தாலும். தனது ஆட்சியில் இந்து இஸ்லாமி பிரச்சனைகள் ஏதுமின்றி சகோதரத்துவத்தை வளர்த்தவர் திப்பு சுல்தான்.
பொது விநியோகம்
நாம் இப்போது செயல்பாட்டில் கடைபிடித்து வரும் பொதுவிநியோகத் திட்டத்தை, திப்பு அவரது ஆட்சியில் அப்போதே செயல்பாட்டில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி
திப்பு சுல்தான் தனது ஆட்சியில் நிறைய வளர்ச்சி திட்டங்களை கொண்டிருந்தார். அதன் மூலம் கிராமங்களும், நகரங்களுக்கு இணையாக வளர்ச்சி அடைய வைத்தார்.