Just In
- 5 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 6 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 6 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 7 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
செய்வினை - பகுத்தறிவற்ற மற்றும் வஞ்சகத்தின் ஆயுதம்!
கருப்பு தந்திரம் எனப்படும் செய்வினை என்பது பெயருக்கு ஏற்ப துன்பத்திற்கான மிக முக்கியமான காரணமாகும். இடது கை பாதை பழக்கமான வமச்சாரா, அதாவது நோக்குநிலை தந்திரமாகும் இது.
தூங்கும் போது ஆளை அமுக்கும் 'அமுக்குவான் பேய்' பற்றி தெரியுமா?
தங்களின் விரோதிகளால் தனிப்பட்ட நபர்களின் மீது திசை திருப்பப்பட்ட மனித செயலாகும் இது. அதனால் இரண்டு வழியில் தீமையை ஏற்படுத்துகின்ற தீய சடங்காகும் இது - மகா செய்வினை மற்றும் ஷுத்ர செய்வினை.
உலகின் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்....
மகா செய்வினை
மகா செய்வினை என்ற இந்த முறை ஆற்றல் திறன் அல்லது உயிரியல் நகைச்சுவையின் மூன்று அடிப்படை கொள்கைகளை கொண்ட தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையின் கலவையான திரிதோஷங்களில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி அவரை தாக்கி, அழித்துவிடும். மேலும் உடல்நலத்தை வெகுவாக பாதித்து, மரணத்தை உண்டாக்கும்.
ஷுத்ர செய்வினை
மறுபுறம், ஷுத்ர செய்வினை என்பது நாடு கடத்தல், அழிவு, பைத்தியம், கருத்து மாறுபாடு மற்றும் மரணம் ஆகியவற்றின் காரணமாகும். இது தங்களின் கர்ம பலன்களை மாற்ற, தங்கள் பலியாடுகளின் மீது விரோதிகள் பயன்படுத்தும், மிகவும் மனித நேயமற்ற பழிவாங்கல் முறையாகும் இது. நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வ வேதத்தில் செய்வினை அல்லது சூனியம் பற்றி பாசுரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அசுரர்கள், தீய ஆத்மாக்கள், பேய்கள், சக்தி வாய்ந்த விரோதிகள் மற்றும் சூனியக்காரர்கள் ஆகியோர்களின் மீது ஏவப்படுவதே செய்வினையின் பழக்கமாகும். செய்வினையின் பாதை ஆறு பகுதிகளை கொண்டுள்ளது:
வசிகரன்
வசிகரன் என்பது அடிமைப்படுத்துவதாகும். இது பலியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்.
ஆகர்ஷன
ஈர்ப்பு என அறியப்படும் இது, ஒரு தனிப்பட்ட நபரை தனிப்பட்ட மற்றொரு நபர், இடம் அல்லது வாழ்க்கை முறையின் மீது ஈர்ப்படைய செய்யும்.
ஸ்தம்பன
ஸ்தம்பன என்பது முடக்குவதாகும். பலிக்கு ஈடுப்பாடின்மையை ஏற்படுத்தி, தற்போதைய சூழ்நிலையில் இருந்து துண்டிக்கப்படுவார்கள்.
வித்வேஷனா
குடும்ப உறுப்பினர்கள் அல்லது நிறுவனம் அல்லது சமூகத்தில் ஏற்படும் பகையை இது குறிக்கும்.
உச்சாடனா
சந்தோஷத்தை வெளியேற்றி, நிதி சார்ந்த பிரச்சனைகள், அவமானங்கள், சமுதாயத்தில் இருந்து நிராகரிப்பு மற்றும் வெறுப்பு, வீட்டை இழத்தல் போன்ற பிரச்சனைகளை இது குறிக்கும்.
மரணம்
வன்முறை, மன ரீதியான சமநிலையற்றல் அல்லது தற்கொலை போன்ற பல்வேறு வழியில் பலிக்கு மரணத்தை உண்டாக்குவதே இதன் அர்த்தம்.
ப்ரஷ்னா முறை
ஜோதிடத்தில், ப்ரஷ்னா முறை என்பது அபிச்சாராவின் மந்திர தந்திரங்கள் மற்றும் சூழ்ச்சிகள் மூலமாக உருவாகும் எதிர்மறை ஆற்றல் செல்வாக்குகளை தெரிந்து கொள்வதற்கான முக்கியமான கருவிகளில் ஒன்றாகும். ப்ரஷ்னா முறைப்படி, பலிகடாவான நபரின் மீது ஏவப்பட்ட ஏவலின் வகையை, அதாவது, மகா செய்வினையா அல்லது ஷூத்ர செய்வினையா என்பதை ஒரு மதிப்பீடு செய்து அதனை வெளிப்படுத்தவும் முடியும்.
எதிரியின் தோற்றம், ஜாதி, உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் அவர்களின் இருப்பிடங்களை இந்த விளக்கப்படம் மூலம் தீர்மானிக்கலாம். குற்றத்தின் பின்னணி மற்றும் ஜெபத்தின் வடிவம் ஆகியவற்றை தங்கள் ராசி மற்றும் அதன் நிலையை தூண்டும் தீய கிரகங்களின் நுண்ணிய விவரங்களைக் கொண்டு கவனிக்கலாம்.
ராசியை கண்டுபிடிக்கும் கணிப்புகள்
7 கிரகங்களில் பிரச்சனையை ஏற்படுத்தும் ஒன்றை கண்டுகொள்வது தான் சூழ்ச்சிகளின் தீய தாக்குதலை நடுநிலையாக்குவதாகும். இந்த கிரகங்கள் எந்த இடத்தில் பிரச்சனை செய்கிறது என்பதை கண்டுப்பிடிப்பது கஷ்டமாகும். அகோர ருத்ர பலி (சூரியன்), கபாலா ஹோமம் (சந்திரன்), பூட்டா மரண பலி (செவ்வாய்), சர்க ஹோமம் (புதன்), பிரதிகராபலி (வியாழன், சனி), பூட்டா மரண பலி (சுக்ரன்) போன்ற சரியான ஹோமத்தை செய்வது தான் இதற்கான சரியான நடவடிக்கைகளாகும். எந்த கிரகம் இந்த பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்த பின்னர் சரியான ஹோமத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.