Just In
- 4 min ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 1 hr ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 2 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 2 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
Don't Miss
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
தூக்கி வாரிப் போடும் மலேசியா ஏர்லைன் விமானம் MH-370 பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!
3 மாதங்களுக்கு முன்பு மலேசியா ஏர்லைன் விமானம் MH-370 மாயமானது. நிலையின்மை என்ற விந்தையான போர்வைக்குள் மூடியிருக்கும் மர்மங்களினால், பதில்களை விட கேள்விகள் தான் குவிந்து கொண்டே செல்கிறது. கடுந்துயரத்தில் இருந்த பயணிகளின் உறவினர்கள் தேடும் முயற்சியை கைவிட்ட போதிலும், பல விதமான சூழ்ச்சி கோட்பாடுகள் எழுந்துள்ளது.
மாயமான மலேசியா விமானத்தை பற்றிய பல கோட்பாடுகள் ஒதுக்கப்பட வேண்டியவை என்றாலும், நாங்கள் கூறப்போகும் இந்த குறிப்பிட்ட கோட்பாடு சரியானதாக தெரிகிறது. MH-370 விமானத்தை சுற்றியுள்ள மர்மங்களைப் பற்றி தான் இந்த கட்டுரை கூறப்போகிறது. தற்போதுள்ள விமான தொழில்நுட்பம், அதன் ஆற்றல் மற்றும் சந்தேகம் படும்படியான எதையும் மோப்பம் பிடிக்கும் திறன் போன்றவைக்கு மத்தியில், மலேசியா விமான ஏர்லைன் MH-370 மீது எண்ணிலடங்கா கேள்விகள் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான வேறு: மலேசியா விமானம் போன்றே மாயமான சில விமானங்கள்!!!
தேடுதல் பணியில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது நீங்கள் அனைவரும் அறிந்த செய்தியே. இப்படிப்பட்ட நேரத்தில் பணியில் ஈடுபட்டவர்களின் திறமையைப் பற்றி ஆலோசிப்பதில் எந்த வித அவசியமும் இல்லை. ஆனால் இந்த விமானத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சூழ்ச்சி கோட்பாடு எழுந்துள்ளது.
டிகோ கார்ஸியா தீவில் இந்த MH-370 விமானம் தரையிறங்கியுள்ளது என அமெரிக்க கூறியுள்ள விஷயத்தை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஏன்? சில பெரும் புள்ளிகளை நீக்க வேண்டியே அமெரிக்கா இதை செய்துள்ளது என்றால், அதை ஏன் விமானம் கிளம்புவதற்கு முன்னாலேயே அவர்கள் செய்திருக்கக்கூடாது? அதனால் இந்த கோட்பாடு பொருந்தவில்லை. இப்போது விமானத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாமா...!
இதுப்போன்று வேறு: உலகின் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்....
டிகோ கார்ஸியா எல்லை
கோலாலம்பூரை விட்டு கிளம்பிய நேரத்தில் இருந்து, MH-370 விமானத்தால் 3000 மைல் தூரம் பறந்திருக்க முடியும். அப்படிப் பார்த்தால் டிகோ கார்ஸியா இந்த எல்லைக்குள்ளே வந்து விடும்.
மின்சார செயலாற்றல்
MH-370 விமானத்தின் அலை வாங்கிச் செலுத்தி பழுதாகி விட்டது. மின்சார செயலாற்றல் காரணமாக கூட இது நடந்திருக்கலாம்.
அலை வாங்கிச் செலுத்தி பழுது
ஆனால் ஒன்று. அலை வாங்கிச் செலுத்தி பழுதாகி விட்டதென்றால், விமானத்தால் நீண்ட தூரம் பறந்திருக்க முடியாது. காரணம் அலை வாங்கிச் செலுத்தி பாதிப்பு, மின்சார அமைப்பு செயலாற்றல் என சுட்டிக் காட்டியிருக்கும்.
தரையிறக்கம் இல்லை ஏன்?
இதோ ஒரு முரண் நகைப் பண்பு. அலை வாங்கிச் செலுத்தி பழுதான ஒரு மணிநேரத்திற்கு பிறகு, ராடார் கருவியில் விமானம் தென்பட்டுள்ளது. விமானத்தின் கொள்ளளவை கொண்டு பார்க்கையில், மின்சார செயலாற்றலுடன் விமானத்தால் அவ்வளவு தூரம் பறந்திருக்க முடியாது. பொதுவாக அப்படிப்பட்ட அமைப்பு செயலாற்றலின் போது, விமானத்தை அவசரமாக தரையிறக்கம் செய்து விடுவதே விமானியின் வழக்கம். ஆனால் அருகில் தரையிறக்கம் செய்ய வேண்டிய இடம் ஒரு மணிநேரத்திற்கு குறைவான இடத்தில் இருந்த போதிலும் அதை ஏன் அவர் செய்யவில்லை?
விமானியின் சதியோ?
அப்படியானால் அலை வாங்கிச் செலுத்தியை வேண்டுமென்றே விமானி அணைத்திருக்க வேண்டும். அப்படி செய்து விமானத்தை வேண்டுமென்றே நொறுங்க வைக்க நினைத்திருந்தால், விமானத்தின் பல பகுதிகள் தண்ணீரில் மிதந்திருக்க வேண்டும்.
ராணுவ ஏவுகணையின் தாக்கமோ?
ஒரு வேளை, ராணுவ ஏவுகணையால் அது தாக்கப்பட்டிருந்தால், கண்டிப்பாக அது ராடாரில் பதியப்பட்டிருக்கும்.
கருப்பு பெட்டி எப்போதும் அழியாதே!
ஒவ்வொரு விமானத்திலும் 30 நாட்களுக்கு சிக்னல் அனுப்பும் கருப்பு பெட்டி இருக்கும். இந்த கருப்பு பெட்டி வெடி விபத்திலும் அழியாது. அதனால் அதன் சரியான இடத்தை அது வெளிக்காட்டியிருக்கும்.
எதற்காக கடத்தல்?
அடுத்து, டிகோ கார்ஸியா என்ற தீவிற்கு அமெரிக்க விமானத்தை கடத்தியுள்ளது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அப்படியானால் அப்பாவிகளை அவர்கள் ஏன் கடத்த வேண்டும்?
இன்னமும் என்ன நடந்தது என்பது சரியாக தெரியவில்லை. இருட்டில் இருக்கும் நாம் வெளிச்சத்தை அடைய இன்னும் எத்தனை நாள் ஆகுமோ?