Just In
- 56 min ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 1 hr ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 4 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
Don't Miss
- News படத்துல 8 முயல்கள் இருக்கு! எங்க இருக்குனு கேட்காதீங்க! அத நீங்கள்தான் கண்டுபிடிக்கணும்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சிவபெருமானை விழுங்கிய பெண் தெய்வத்தை பற்றிய கதை!!!
தன்னுடைய கணவனாகிய சிவபெருமானை பார்வதி தேவி விழுங்கியது உங்களுக்கு தெரியுமா? இது உண்மையா என நீங்கள் வியக்கலாம். ஆம், உண்மையே! துமாவதி வடிவத்தில் இருந்த பார்வதி தேவி சிவபெருமானை விழுங்கினார். பின்னர் இதனால் அசிங்கமான விதவை கோலத்தை கொண்டார்.
துமாவதி என்றால் புகை என அர்த்தமாகும். துமாவதி தேவி என்பவர் 10 மகாவித்யாக்களில் ஏழாவது வடிவமாவார். இந்த வடிவத்தில், சிவபெருமான் இல்லாமல் ஒரு விதவையாக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். புகையின் மேனி நிறத்தை கொண்ட இவர் காகம் படம் போட்ட கொடி பார்க்கும் ரதத்தில் வருவார். சில நேரம் காகத்தின் மீது பயணம் செய்த படி வருவதை போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
உயரமாக உள்ள இவர் தூய்மையான வெண்ணிற ஆடைகளை அணிந்திருப்பார். மிகவும் அசிங்கமாக இருக்கும் இவர் கோபம், பேராசை, துயரம், தோல்வி, வேதனை, தனிமை மற்றும் அவமானம் போன்ற எதிர்மறையான எண்ணங்களை கொண்டிருப்பார். எரியும் நிலத்தின் மீது அவர் வசித்திருப்பார். இவ்வகையான சோர்வுடைய குணாதிசயங்களைக் கொண்டிருந்தாலும், இயற்கைக்கு மாறான திறன்கள் மூலமாக தன் பக்தர்களை ஆசீர்வதித்து அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவார் இந்த கடவுள்.
சிவபெருமானை விழுங்கி, பின் விதவையான இந்த கடவுளின் கதையைப் பார்க்கலாமா?
துமாவதியின் கதை
துமாவதி கடவுள் பற்றி பலவிதமான கதைகள் நிலவுகிறது. அதில் ஒன்று தான் இது; ஒரு முறை பார்வதி தேவிக்கு பயங்கரமாக பசி எடுத்த போது, அவருக்கு உணவு கிடைக்கவில்லை. அதனால் தன் கணவனான சிவபெருமானிடம் கொஞ்சம் உணவளிக்குமாறு கேட்டார். சிறிது காத்திருக்க சொல்லி விட்டு தவம் புரிய அவர் சென்று விட்டார். தன் பசியை பொறுக்க முடியாத பார்வதி தேவி, மிகுந்த கோபம் கொண்டார். காளி வடிவை எடுத்து சிவபெருமானை உட்கொண்டார். சிவபெருமானை சாப்பிட்ட பிறகு தான் அவரின் அகோர பசி அடங்கியது.
நெற்றிக்கண்ணை திறந்த சிவன்
இருப்பினும் தன்னை பார்வதி தேவி விழுங்கியதை உணர்ந்த சிவன் கோபம் கொண்டார். தன் நெற்றிக்கண்ணை சிவபெருமான் திறந்து விட்டதால், பார்வதி தேவியால் அதீத ஆற்றலை கொள்ள முடியவில்லை. சிவபெருமானின் எரிக்கும் ஆற்றலால் அவர் புகையாக மாற தொடங்கினார். தன் தவறை சீக்கிரமே உணர்ந்த பார்வதி தேவி சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டார். சிவபெருமானை வெளியே எடுத்தார். கோபத்தில் இருந்த சிவபெருமான், பார்வதி தேவி ஒரு விதவையைப் போல் வலம் வர வேண்டும் என சாபமளித்தார்.
துமாவதியின் மற்றொரு கதை
துமாவதி தேவியைப் பற்றி மற்றொரு கதை உள்ளது. அதன்படி, தன் பக்தர்களை காக்க, தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற அவர் சிவபெருமானை விழுங்கியுள்ளார். ஒருமுறை மல்லா என்ற அகோரி துறவி, தன்னை அனைத்து விதமான பிரபஞ்சம் சம்பந்தமான வலிமைகளில் இருந்து பாதுகாக்குமாறு காளி தேவியிடம் வரம் கேட்டார். இந்த வரத்தைப் பெற்ற பின் மனித இனத்திற்கு அழிவை ஏற்படுத்த தொடங்கினார் அந்த துறவி. அகோரா வடிவத்தை எடுத்து அந்த துறவியை கொல்ல முயன்றார் சிவபெருமான். ஆனால் தன் சத்தியத்தை காக்க மல்லாவை பாதுகாக்க வந்தார் காளி தேவி. சிவபெருமான் மல்லாவை கொல்லாமல் இருக்க, காளிதேவி சிவபெருமானை விழுங்கி, பின் விதவையானார்.
விதவை துமாவதி தேவி
அதனால் தான் துமாவதி ஒரு விதவையாக சித்தரிக்கப்பட்டுள்ளார். கணவன் இல்லாமல் இருக்கும் ஒரே மகாவித்யா இவர் மட்டுமே. இவரை அதிர்ஷ்டம் இல்லாதவராகவும், அமங்கலமானவராகவும் கருதுகின்றனர். திருமணமான தம்பதிகள் துமாவதி தேவியை வணங்க வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறார்கள். இவரை வணங்கினால் தனிமை உணர்வும், உலகத்தின் சந்தோஷங்கள் மீது அதிருப்தியும் ஏற்படும் என நம்பப்படுகிறது. அதனால் தந்த்ரிகள் மற்றும் உலகத்தின் ஆசைகளை துறந்தவர்கள் மட்டுமே துமாவதி தேவியை வணங்குவார்கள்.
விதவை துமாவதி தேவி
துமாவதி தேவியை அமங்கலமானவராக, பயத்தை ஏற்படுத்துபவராக பார்த்தாலும் கூட, தன் பக்தர்கள் நினைத்ததை அருளும் கடவுளாக இருக்கிறார். அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் தன் பக்தர்களை காப்பாற்றுகிறார். கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டு, இரவு நேரத்தில் சுடுகாட்டில் தான் இவரை வணங்க வேண்டும். இவரை வணங்கும் முன், நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து, மௌனமாகவும் இருக்க வேண்டும். துமாவதி கோவில்கள் அரிதாகவே காணப்படும். துமாவதி தேவியின் மிகவும் புகழ்பெற்ற கோவில் வாரணாசியில் உள்ளது. இங்கே வழக்கத்திற்கு மாறான பொருட்களை கொண்டு அவரை வணங்குவார்கள். பழங்கள் மற்றும் பூக்களுடன் மாமிசம், பாங்கு, மதுபானம், சிகரெட் மற்றும் இரத்த பலிகள் கூட இவருக்கு படைக்கப்படும்.
தன் கணவனை விழுங்கிய கொடூரமான கடவுளாக இருந்தாலும் கூட, அருமையான சக்திகளை கொண்டுள்ள விதிவிலக்கான கடவுளே துமாவதி தேவி.