Just In
- 18 min ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 1 hr ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 1 hr ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- 2 hrs ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
Don't Miss
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
குழந்தைகளை கண்காணிப்பதற்காக ஃபேஸ்புக்கிற்கு தாவும் பெற்றோர்கள்!
இன்றைய நாட்களில், ஒரு மனிதரைப் பற்றி உங்களுக்கு ஓரளவு மட்டுமே தெரியும், ஆனால் மேலும் பல விபரங்களை தெரிந்து கொள்ள நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் மனதிற்கு முதலில் வருவது ஃபேஸ்புக் தான். ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட வயதை சேர்ந்தவர்கள் மட்டும் தான் ஃபேஸ்புக் பயன்படுத்தலாம் என்பதையும், தாண்டி அனைவரையும் கவர்ந்த சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் உள்ளது.
தற்போதைய ஃபேஸ்புக் பயனாளர்களுக்கு வயது வரம்புகள் எதுவும் இல்லை. அதிலும், பிள்ளைகளைப் பெற்றவர்கள் பலரும், தங்களுடைய குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் விதமாக, ஃபேஸ்புக்கில் உறுப்பினர்களாக சேர்ந்து வருவது இந்த சமூக வலைதளத்தின் புதிய பரிணாமமாக உள்ளது.
உங்களுடைய பெற்றோர்கள் ஃபேஸ்புக்கில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஃபேஸ்புக்கில் நுழைந்தவுடன், உங்களுடைய தாய் அல்லது தந்தையின் நண்பருக்கான கோரிக்கை வரவேற்றால், உங்களுக்கு எப்படி இருக்கும்? இந்த சூழலுக்கு தயாராகிக் கொள்ளுங்கள். இவ்வாறு நிகழ்வதற்கு பின்னணியில் என்ன காரணம் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா? ஃபேஸ்புக்கில் பெற்றோர்கள் சேர்வது, 'சாட்' செய்யவோ, மற்றவர்களுடன் பழகவோ அல்லது புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவோ இல்லை. இதற்கு மாறாக, தங்களுடைய குழந்தைகளின் நடவடிக்கைகளை அவர்கள் கவனிக்க, ஃபேஸ்புக்கை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.
பெற்றோர்களே நண்பர்கள்
ஃபேஸ்புக்கில் உறுப்பினராக உள்ள பெற்றோர்கள் பலரும், தங்களுடைய குழந்தைகளுடன் ஃபேஸ்புக் நண்பர்களாக உள்ளனர்.
விவரங்களை அறிய...
வாரத்திற்கு ஒருமுறையாவது தங்களுடைய குழந்தைகளின் விபரங்களை அவர்கள் பார்க்கிறார்கள்.
குழந்தைகளின் நிலையை தெரிந்து கொள்ள...
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நிலையை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது.
போட்டோக்களைப் பார்க்க...
தங்களுடைய குழந்தைகள் 'டாக் (Tag)' செய்திருக்கும் புகைப்படங்களை பார்க்க பெற்றோர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும் மிகவும் மோசமாகவோ அல்லது சங்கோஜப்படுத்தும் வகையிலோ இருக்கும் போட்டோக்களுக்கு, கமெண்ட் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.
குறிப்பு
தங்களுடைய குழந்தையைப் பற்றிய கவலையினால் தான் பெற்றோர்கள் இவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் எதையாவது போஸ்டிங் செய்தால், அது தவறானதாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குழந்தைகளுக்கு சிறிதளவு சுதந்திரத்தை கொடுக்கும் அதே நேரத்தில், அவர்கள் மீது ஒரு கண் வைத்திருப்பதும் நல்லது தான். அதே நேரம், அடிக்கடி கமெண்ட் கொடுத்து அவர்களுடைய தனிமையை தொந்தரவு செய்தால், அந்த பழக்கம் பெற்றோர்-குழந்தை உறவில் தவறான விளைவுகளையே ஏற்படுத்தும்.
நீங்கள் எதையாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால், கீழே தெரியும் கமெண்ட் பாக்ஸ்-ல் உங்களுடைய கருத்துக்களை கொடுக்கவும்.