Just In
- 25 min ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 1 hr ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 2 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
Don't Miss
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
கல்லூரியில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய அற்புதமான 5 வாழ்க்கை பாடங்கள்!!!
கல்லூரி என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாகும். இந்த கட்டத்தில் ஒருவருக்கு வாழ்க்கையில் கணக்கிட முடியாத அளவிலான கற்றல் ஏற்படும். இது வெறும் பாடத்தை கற்பிப்பதோடு அடங்கி விடாது. கல்லூரி நமக்கு கற்றுத்தரும் அருமையான வாழ்க்கை பாடங்களைப் பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் கல்லூரியை வாழ்க்கையை கடந்து வந்தவர் என்றால், கல்லூரியால் மட்டும் தான் சில விஷயங்களை கற்றுத்தர முடியும் என்பதை நீங்கள் கண்டிப்பாக ஒத்துக் கொள்வீர்கள்.
சுய கண்டுபிடிப்பின் பயணம் தான் கல்லூரி வாழ்க்கையின் பிரதான அம்சமாகும். அங்கே நாம் அனுபவிக்கும் பேரின்பமான நாட்கள் தெளிவாக விவரிக்க முடியாதவை. சற்று பின்னோக்கி சென்று, நம் கல்லூரி வாழ்க்கை, நமக்கு கற்று தந்த வாழ்க்கை அருமையான பாடங்களை இப்போது பார்க்கலாமா...? இதோ அந்த ஐந்து பாடங்கள்!
1. தன் மீது நம்பிக்கை
நாம் வெளிப்பட்டுள்ள பல சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் கருதுகையில், கல்லூரி வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அதி முக்கிய விஷயங்களில் ஒன்று தான் தன் மீதான நம்பிக்கை. பல விஷயங்களை நம்மால் முடிக்க முடியாது என்ற எண்ணத்தை நாம் கொண்டிருப்போம். அவ்வகையான சூழ்நிலைகளை சமாளிக்க நம் மீதான தன்னம்பிக்கையை வளர்ப்பது கல்லூரி தான்.
2. தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகும்
கல்லூரி வாழ்க்கையில் அனுபவிக்கும் போது தான் தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம் என நமக்கு தெரிய வரும். தோல்வி இல்லாமல் கல்லூரி வாழ்க்கையே இல்லை தானே!
3. அடுத்தவர்களை கையாளுவது
வேறுபட்ட பல பண்பாடுகள் மற்றும் இடங்களில் இருந்து கல்லூரியில் படிக்க வரும் பல மாணவர்களுடன் முதலில் ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் கல்லூரி நமக்கு கற்று தந்தது என்ன? பலருடன் அனுசரித்து சென்று, பல்வேறு பண்பாடுகள் மற்றும் இடங்களில் இருந்து வந்துள்ள மாணவர்களுடன் நட்பை வளர்க்க அது கற்று தந்துள்ளது.
4. பொருட்படுத்தாமல் மறப்பது
நம் ஹாஸ்டல் அறை வாசிகளுடன் எவ்வளவு சண்டை போட்டிருப்போம்? ஆனாலும் கூட அவர்களுடன் நல்ல நண்பர்களாக தானே இருந்திருப்போம்? ஆம், பொருட்படுத்தாமல் மறக்கும் குணத்தை நமக்கு கற்று கொடுத்தது கல்லூரி தான். மன்னிக்கும் தன்மை கூட பல இடங்களில் வெளிப்பட்டிருக்கும்.
5. சில நட்புகள் கடைசி வரை நிலைத்திருக்கும்
சில நட்புகள் கடைசி வரை நிலைத்திருக்கும் என்பதை நமக்கு கற்றுத் தருவதும் கல்லூரி தான். கல்லூரியில் நமக்கு கிடைக்கும் நட்புகளில் சில கடைசி வரைக்கும் நீடித்திருக்கும்.
என்ன நண்பர்களே! உண்மை தானே!