Just In
- 3 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 6 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 6 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 7 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
6 வாரத்திற்கு ஒருமுறை தோல் உரிக்கும் பாம்பு பெண்: வினோத சரும கோளாறு!
இங்கு ஆறு வாரத்திற்கு ஒருமுறை தோல் உரிக்கும் உலகின் அதிசய பாம்பு பெண் பற்றி கூறப்பட்டுள்ளது.
பெண்கள் என்றாலே அழகு. முகத்தில் சிறிய அளவு பரு வந்தாலே பெண்கள் பெரியவளவில் கவலைப்படுவார்கள். ஆனால், இதுவே ஒரு பதின் வயது பெண்ணுக்கு ஆறு வாரத்திற்கு ஒருமுறை உடலில் இருக்கும் ஒட்டு மொத்த தோலும் உரிந்து வருகிறது என்றால்?
நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கும் இந்த சூழலில் தான் தினமும் வாழ்ந்து வருகிறார் இந்தியாவை சேர்ந்த ஷாலினி எனும் பெண்....
வினோத உடல் நிலை!
ஷாலினி யாதவ் 16 வயது நிரம்பிய இளம் பெண். இவர் ஒரு வினோத சரும பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஒவ்வொரு ஆறு வாரத்திற்கும் ஒருமுறை இவரது தோல் பாம்பு தோல் போல உரிந்து வந்துவிடுகிறது.
எர்தோடெர்மா (Erthroderma)
இந்த சரும கோளாறுக்கு பெயர் எர்தோடெர்மா என கூறப்படுகிறது. இவர் வலி இல்லாமல் இருக்க க்ரீம் பயன்படுத்துகிறார். இவரது வீட்டின் பொருளாதார சூழலால் அந்த க்ரீமை எப்போதும் வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
குழந்தை பருவத்தில் இருந்து!
ஷாலினிக்கு இந்த சரும கோளாறு குழந்தை பருவத்தில் இருந்து இருக்கிறது. 45 நாட்களுக்கு ஒருமுறை தோல் உரிந்து வந்துவிடும்.
சிகிச்சை இல்லை!
ஷாலினியின் பெற்றோர் இவரை பல மருத்துவர்களிடம் காண்பித்துவிட்டனர். ஆனால், இதற்கான சரியான சிகிச்சை முறை இல்லை என கூறப்படுகிறது.
கொஞ்சம், கொஞ்சமாக....
இந்த சரும கோளாறு இவரை கொல்லவில்லை எனிலும், இவரது வாழ்க்கை கொஞ்சமாக, கொஞ்சமாக முடிந்து வருகிறது. இதனால் ஏற்படும் வலி, சரும வெடிப்பு, இரத்தம் கசிதல் போன்றவை மிகவும் வலி மிகுந்தது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு உதவ முடியாத சூழலில் இருக்கிறார் ஷாலினியின் தாய்.
ஷாலினி....
மற்ற குழந்தைகள் அச்சம் கொள்வதால் இவரை பள்ளியில் சேர்க்க மறுக்கிறார்கள். இவருடன் நட்புடன் பழகவும் யாரும் முன்வருவது இல்லை. இந்த சரும கோளாறுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம், இதனால் என்னை ஏன் வெறுக்கிறீர்கள் என்ற கேள்வியை தான் ஷாலினி மக்கள் முன் வைக்கிறார்.