Just In
- 1 hr ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 4 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
போலி மருத்துவரின் சிகிச்சையால் வாழ்க்கையையே இழந்த சிறுவன்!
மிலன் சிறுவனுக்கு 16 வயது தான் ஆகிறது. இவனால் மற்றவர்களைப் போல் சாதாரண வாழ்க்கை வாழ முடியவில்லை. இச்சிறுவனுக்கு எப்படி இந்நிலை ஏற்பட்டது, எப்பேற்பட்ட வாழ்வை வாழ்ந்து வருகிறான் என்பதை பாருங்கள்.
தற்போது எத்தனையோ நோய்கள் கொடிய நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அப்படி ஒரு அரிய வகை உடல்நல பிரச்சனையால் இந்திய சிறுவன் ஒருவன் அவஸ்தைப்படுகிறான். அதுவும் நியூரோஃபைரோமாடோசிஸ் என்னும் உடல் மற்றும் முகம் முழுவதும் கட்டிகளைக் கொண்ட ஒரு அரிய மரபணு கோளாறால் கஷ்டப்பட்டு வருகிறான்.
இச்சிறுவனுக்கு 16 வயது தான் ஆகிறது. இவனால் மற்றவர்களைப் போல் சாதாரண வாழ்க்கை வாழ முடியவில்லை. இந்த வயதில் நண்பர்களுடன் பள்ளியில் நேரத்தை செலவழிப்பதற்கு பதிலாக, நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டு தனிமையான வாழ்வை வாழ்ந்து வருகிறான்.
இச்சிறுவனுக்கு எப்படி இந்நிலை ஏற்பட்டது, எப்பேற்பட்ட வாழ்வை வாழ்ந்து வருகிறான் என்பதை தொடர்ந்து படித்துப் பாருங்கள்.
16 வயது
பீகாரில் உள்ள நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தான் மிலன். இவன் நியூரோஃபைப்டோமாடோசிஸ் என்னும் அரிய மரபணு கோளாறால் அவஸ்தைப்பட்டு வருகிறான். இந்த கோளாறால் உடல் முழுவதும் சிறிய மற்றும் பெரிய கட்டிகளுடன் பயங்கர தோற்றத்தில் காணப்படுகிறான்.
பேய் சிறுவன்
உள்ளூரைச் சேர்ந்தவர்கள் இச்சிறுவனை பேய் சிறுவன் என்று அழைப்பார்கள். இச்சிறுவனுடன் யாரும் பேசவோ, விளையாடவோ விரும்பமாட்டார்களாம். இதற்கு இச்சிறுவனின் மோசமான தோற்றம் தான் காரணம்.
அஞ்சி ஓடுவார்கள்
மிலனின் தோற்றத்தைக் கண்டு, அருகில் உள்ள சிறுவர்கள் எல்லாம் அஞ்சி ஓடுவார்களாம். மிலனின் வாய், மூக்கு, கண்கள் போன்ற பகுதிகள் வீங்கி இருப்பதால், இவனால் சரியாக பேசவோ, மூச்சுவிடவோ, ஏன் பார்க்க கூட முடியாதாம். இந்த காரணத்தினாலேயே இவனது படிப்பும் முடங்கிவிட்டது.
பிறப்பிலேயே இல்லை
மிலனுக்கு இந்நிலை பிறப்பில் இருந்தே இல்லையாம். பீகாரில் உள்ள ஒரு போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான், மிலன் இப்படி பாதிக்கப்பட்டுள்ளானாம். அதுவும் ஏற்கனவே தன் உடலில் இருந்த வலிமிக்க ஒரு மச்சத்திற்கு சிகிச்சைப் பெற சென்ற போது நேர்ந்ததாம்.
தந்தையின் ஒரு நாள் வருமானம் ரூ.250
மிலனின் தந்தை ஒரு அன்றாட கூலி தொழில் செய்து வருபவர். இவர் ஒரு நாளைக்கு ரூ.250 தான் சம்பாதிப்பாராம். இந்த சம்பளத்தைக் கொண்டு, மிலனின் இந்த மோசமான நிலையைப் போக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்.
சபிக்கப்பட்டவன்
மிலனின் அக்கம்பக்கத்தினர், இச்சிறுவன் கடவுளால் சபிக்கப்பட்டவனாக நம்புகின்றனர். இச்சிறுவனின் இந்த வலிமிக்க நிலையைப் போக்க, அருகில் உள்ளவர்கள் பல சடங்குகளையும் மேற்கொண்டுள்ளனராம்.
குணப்படுத்த முடியாத நிலை
நியூரோஃபைரோமாடோசிஸ் என்னும் இந்த நிலை குணப்படுத்த முடியாதது மற்றும் உலகிலேயே 33,000 பேரில் ஒருவருக்கு தான் இம்மாதிரியான கோளாறு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனராம்.
குணப்படுத்த கூடியதே!
சில மருத்துவர்கள், இச்சிறுவனின் நிலையை குணப்படுத்த முடியும் என்று கூறுகின்றனராம். ஆனால் அதற்கு இச்சிறுவனுக்கு பல அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறுகின்றனர். மற்றும் இந்த சிகிச்சைகளை செய்வதற்கு குறைந்தது ரூ.3,00,000 தேவைப்படுமாம்.