Just In
- 35 min ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 1 hr ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 2 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- 3 hrs ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
Don't Miss
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Finance சென்னை-க்கு ஓடி வந்த அம்பானி..! புதிய பிஸ்னஸ், சியோமி உடன் போட்டியா..?
- Movies கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போலி மருத்துவரின் சிகிச்சையால் வாழ்க்கையையே இழந்த சிறுவன்!
மிலன் சிறுவனுக்கு 16 வயது தான் ஆகிறது. இவனால் மற்றவர்களைப் போல் சாதாரண வாழ்க்கை வாழ முடியவில்லை. இச்சிறுவனுக்கு எப்படி இந்நிலை ஏற்பட்டது, எப்பேற்பட்ட வாழ்வை வாழ்ந்து வருகிறான் என்பதை பாருங்கள்.
தற்போது எத்தனையோ நோய்கள் கொடிய நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அப்படி ஒரு அரிய வகை உடல்நல பிரச்சனையால் இந்திய சிறுவன் ஒருவன் அவஸ்தைப்படுகிறான். அதுவும் நியூரோஃபைரோமாடோசிஸ் என்னும் உடல் மற்றும் முகம் முழுவதும் கட்டிகளைக் கொண்ட ஒரு அரிய மரபணு கோளாறால் கஷ்டப்பட்டு வருகிறான்.
இச்சிறுவனுக்கு 16 வயது தான் ஆகிறது. இவனால் மற்றவர்களைப் போல் சாதாரண வாழ்க்கை வாழ முடியவில்லை. இந்த வயதில் நண்பர்களுடன் பள்ளியில் நேரத்தை செலவழிப்பதற்கு பதிலாக, நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டு தனிமையான வாழ்வை வாழ்ந்து வருகிறான்.
இச்சிறுவனுக்கு எப்படி இந்நிலை ஏற்பட்டது, எப்பேற்பட்ட வாழ்வை வாழ்ந்து வருகிறான் என்பதை தொடர்ந்து படித்துப் பாருங்கள்.
16 வயது
பீகாரில் உள்ள நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தான் மிலன். இவன் நியூரோஃபைப்டோமாடோசிஸ் என்னும் அரிய மரபணு கோளாறால் அவஸ்தைப்பட்டு வருகிறான். இந்த கோளாறால் உடல் முழுவதும் சிறிய மற்றும் பெரிய கட்டிகளுடன் பயங்கர தோற்றத்தில் காணப்படுகிறான்.
பேய் சிறுவன்
உள்ளூரைச் சேர்ந்தவர்கள் இச்சிறுவனை பேய் சிறுவன் என்று அழைப்பார்கள். இச்சிறுவனுடன் யாரும் பேசவோ, விளையாடவோ விரும்பமாட்டார்களாம். இதற்கு இச்சிறுவனின் மோசமான தோற்றம் தான் காரணம்.
அஞ்சி ஓடுவார்கள்
மிலனின் தோற்றத்தைக் கண்டு, அருகில் உள்ள சிறுவர்கள் எல்லாம் அஞ்சி ஓடுவார்களாம். மிலனின் வாய், மூக்கு, கண்கள் போன்ற பகுதிகள் வீங்கி இருப்பதால், இவனால் சரியாக பேசவோ, மூச்சுவிடவோ, ஏன் பார்க்க கூட முடியாதாம். இந்த காரணத்தினாலேயே இவனது படிப்பும் முடங்கிவிட்டது.
பிறப்பிலேயே இல்லை
மிலனுக்கு இந்நிலை பிறப்பில் இருந்தே இல்லையாம். பீகாரில் உள்ள ஒரு போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான், மிலன் இப்படி பாதிக்கப்பட்டுள்ளானாம். அதுவும் ஏற்கனவே தன் உடலில் இருந்த வலிமிக்க ஒரு மச்சத்திற்கு சிகிச்சைப் பெற சென்ற போது நேர்ந்ததாம்.
தந்தையின் ஒரு நாள் வருமானம் ரூ.250
மிலனின் தந்தை ஒரு அன்றாட கூலி தொழில் செய்து வருபவர். இவர் ஒரு நாளைக்கு ரூ.250 தான் சம்பாதிப்பாராம். இந்த சம்பளத்தைக் கொண்டு, மிலனின் இந்த மோசமான நிலையைப் போக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்.
சபிக்கப்பட்டவன்
மிலனின் அக்கம்பக்கத்தினர், இச்சிறுவன் கடவுளால் சபிக்கப்பட்டவனாக நம்புகின்றனர். இச்சிறுவனின் இந்த வலிமிக்க நிலையைப் போக்க, அருகில் உள்ளவர்கள் பல சடங்குகளையும் மேற்கொண்டுள்ளனராம்.
குணப்படுத்த முடியாத நிலை
நியூரோஃபைரோமாடோசிஸ் என்னும் இந்த நிலை குணப்படுத்த முடியாதது மற்றும் உலகிலேயே 33,000 பேரில் ஒருவருக்கு தான் இம்மாதிரியான கோளாறு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனராம்.
குணப்படுத்த கூடியதே!
சில மருத்துவர்கள், இச்சிறுவனின் நிலையை குணப்படுத்த முடியும் என்று கூறுகின்றனராம். ஆனால் அதற்கு இச்சிறுவனுக்கு பல அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறுகின்றனர். மற்றும் இந்த சிகிச்சைகளை செய்வதற்கு குறைந்தது ரூ.3,00,000 தேவைப்படுமாம்.