Just In
- 28 min ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 3 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 7 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
Don't Miss
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- News ரிமோட்டை எறிஞ்சு டிவியை உடைச்சு..சில்லறைய சிதற விட்டேனே! இப்போ..மநீமவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி
- Automobiles இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
145 வயது வாழ்ந்த தாத்தாவின் நீண்ட ஆயுள் இரகசியம் இதுதானாம்!
இந்தோனேசியாவின் வயதான நபராக திகழ்ந்த ம்பாஹ் கோத்தோ தனது நீண்டநாள் ஆயுள் இரகசியம் குறித்து கூறியது என்ன தெரியுமா?
நூறு வயசு வாழ வேண்டும், சொர்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், யார் ஆரோக்கியமான வாழ்க்கை பின்பற்றுகிறார்கள்? யார் எல்லாம் சொர்க்கம் செல்ல இப்போது இறக்க ரெடியாக இருக்கிறார்கள்.
யாருமே இல்லை! இதோ, மரணத்தை தானாக அழைத்த கோத்தோ தாத்தா, தனது நீண்ட ஆயுள் பற்றிய இரகசியம் என என்ன கூறி இருக்கிறார் என பாருங்கள்...
கோத்தோ (Mbah Gotho)
கோத்தோ 1870 டிசம்பர் 31 தேதி பிறந்தவர். இவர் ஒருசில நாட்களுக்கு முன்னர் தான் மரணம் அடைந்தார். இவர் இந்தோனேசியாவில் வாழ்ந்து வந்தார். இறக்கும் வரை இந்தோனேசியாவின் வயது மூத்த நபாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பழைய மனிதர்!
இந்தோனேசியா மட்டுமின்றி, இவர் உலகின் பழைய நபர் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பம்!
இவருக்கு நான்கு மனைவி, பத்து குழந்தைகள். இவர்கள் எல்லாரும் இறந்துவிட்டனர். இவரது கடைசி மகன் கடந்த 1988-ல் மரணம் அடைந்தார். இவர் தனது கடைசி நாட்களை கொள்ளுப் பேர குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
நல்ல கவனிப்பு!
எனது பேர பிள்ளைகள் யாரையும் சார்ந்து இன்றி வாழ்ந்து வருகிறார்கள், என்னையும் நல்லப்படி பார்த்துக் கொள்கிறார்கள் என இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் கோத்தோ.
கடைசி வரை ரேடியோ!
கண் பார்வை குறைபாடு இருந்ததால் கோத்தோ டிவி பார்க்க மாட்டார். அதற்கு பதிலாக ரேடியோவில் நாள் முழுதும் செய்தி கேட்டு நாட்டு நடப்புகளை அறிந்துக் கொள்வாராம்,
மரணத்தை அழைத்தவர்!
தனது 146வது பிறந்தநாள் விழாவில் தான், தான் இறப்பதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால், மரணம் தான் என்னை நெருங்க மறுக்கிறது என கோத்தோ கூறியிருந்தார். எந்த நேரத்தில் கூறினாரோ, கூறிய சில வாரங்களிலேயே மரணம் அடைந்துவிட்டார் கோத்தோ.
கல்லறை கட்டி வைத்த கோத்தோ!
தனக்கான கல்லறையை 1992 லேயே கட்டி வைத்துவிட்டா தாத்தா கோத்தோ. தனது இறப்பிற்காக தான் காத்திருந்தார். அவர் கட்டி வைத்த கல்லறையிலேயே அவரை பேர குழந்தைகள் அடக்கம் செய்து வைத்தனர்.
இரகசியம்!
இவர் இவ்வளவு நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்ததன் இரகசியம் என்னவென்று யார் கேட்டாலும், பொறுமை. பொறுமை தான் எல்லாவற்றுக்கும் தேவையானது என பதில் கூறி இருக்கிறார் கோத்தோ.